2 தையல் மெஷினை வைத்து 1000 கோடிக்கு பிஸ்னஸ் செய்யும் அனிதா.. யாரும்மா நீ..!!

மனிஷ் மல்ஹோத்ரா, ரிது குமார் மற்றும் சப்யாசாச்சி போன்ற உலகளவில் பிரபலமான இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் இருக்கும் வேளையில், இந்தியாவின் பணக்கார மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரே தான் பல கோடி பெண்களுக்கு புதிய இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக கூறப்படுகிறது.

யார் இந்த அனிதா டோங்ரே..? ஆண்களுக்கு இணையாக, பல இடத்தில் ஆண்களை விடவும் பெண்கள் தொழிற்துறையில் சிறந்து விளங்கும் வேளையில் போட்டி மிகுந்த ஆடை வடிவமைப்பு துறையில் அனிதா டோங்ரே எட்டிய உயரம் மிகவும் வியப்புக்குரியது.

2 தையல் மெஷினை வைத்து 1000 கோடிக்கு பிஸ்னஸ் செய்யும் அனிதா.. யாரும்மா நீ..!!

அனிதா டோங்ரே இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் மற்றும் நாடு முழுவதும் 270 க்கும் மேற்பட்ட கடைகளுடன் பல நூறு கோடி மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கியுள்ளார். இந்த உச்சத்தை அவ்வளவு எளிதாக அனிதா டோங்ரே எட்டவில்லை என்பதை யாரும் மறந்துவிட கூடாது.

அனிதா டோங்ரே-வின் பல கோடி ரூபாய் மதிப்பிலாண வணிகத்தின் ஆரம்பம் என்றால் இரண்டு தையல் இயந்திரங்கள் தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதுதான் உண்மை.

அனிதா டோங்ரேயின் தாய் புஷ்பா தனது குழந்தைகளுக்கு ஆடைகளை சொந்தமாக அவரே தைத்து வந்தார், அதுவே அனிதா டோங்ரே ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. பின்னாளில் அனிதா டோங்ரே, பணிபுரியும் பெண்களுக்கு மலிவு விலையில் ஆடைகளை உற்பத்தி செய்யும் இந்திய சில்லறை வர்த்தக பிராண்ட் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார்.

இதையே அடிப்படை ஐடியாவாக எடுத்துக்கொண்டு அனிதா இரண்டு தையல் இயந்திரங்கள் மற்றும் அவரது தந்தையிடமிருந்து பெற்ற ஒரு சிறிய கடன் மூலம் தனது சொந்த தொழிலைத் தொடங்க முடிவு செய்தார். 1995 ஆம் ஆண்டில், அனிதாவும் அவரது சகோதரியும் ஒரு சிறிய வீட்டில் இருந்து மேற்கத்திய ஆடைகளைத் சொந்தமாக டிசைன் செய்து தைக்கத் தொடங்கினர்.

அனைத்து மால்கள் மற்றும் பெரிய பிராண்டுகள் அவரது ஆடைகளை நிராகரித்தன, ஆனால் அவர் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்தார். மால்கள் மற்றும் முன்னணி பிராண்டுகளால் நிராகரிக்கப்பட்ட பிறகு, அனிதா டோங்ரே தனது சொந்த பிராண்டைத் தொடங்க முடிவு செய்தார்.

அனிதா டோங்ரே உருவாக்கிய பிராண்டின் பெயர் AND, இது இப்போது இந்தியாவில் பிரபலமான பிராண்டாக உள்ளது. 2015 இல் AND பிராண்ட் பெயர் அறிமுகப்படுத்திய பிறகு, அவர் தனது நிறுவனத்தின் பெயரை ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரே என மாற்றினார்.

இன்று இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆடைகள் பிராண்டுகளில் ஒன்றாக உயர்ந்துள்ள நிலையில் அனிதா டோங்ரே இப்போது தனது ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரே கீழ் AND, குளோபல் தேசி, அனிதா டோங்ரே பிரைடல் கோச்சர், அனிதா டோங்ரே கிராஸ்ரூட் மற்றும் அனிதா டோங்ரே பிங்க் சிட்டி போன்ற தனித்தனி பிராண்டுகள் உள்ளது.

2019-20 நிதியாண்டில், இந்தியாவில் 270க்கும் மேற்பட்ட கடைகளைத் தொடங்கிய பிறகு, தனது சில்லறை வர்த்தகம் கிட்டத்தட்ட ரூ.800 கோடியாக உயர்ந்தது என அனிதா டோங்ரே ஒரு பேட்டியில் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில், அவரது வருமானம் ரூ. 1000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஃபோர்ப்ஸ் இந்தியாவில் உள்ள பணக்கார பெண் ஆடை வடிவமைப்பாளர் பட்டியலில் அனிதா டோங்ரே-வை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் அனிதா டோங்ரேயின் நிகர மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது 83.21 கோடி ரூபாயாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+