தொழில்முனைவோரும் எழுத்தாளருமான அங்கூர் வாரிகூ சமீபத்தில் தனது லிங்க்ட்இன் பக்கத்தில், பலருக்கும் ஊக்கம் தரும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், அமெரிக்காவில் PhD படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு திரும்பியதில் இருந்து, 5 ஆண்டுகளில் அவரது வருட வருமானம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.33 லட்சமாக உயர்ந்தது வரை தனது பயணத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் 24 வயதில், திட்டமின்றி இந்தியாவுக்கு திரும்பினேன். எதிர்காலம் குறித்து என்ன செய்வது என்ற தெளிவே இல்லை. ஆனால் பணம் தேவைப்பட்டது. எனவே வேலையைத் தேட ஆரம்பித்தேன்." MBA படிப்பு இல்லை. நல்ல உறவுகள் அல்லது நெட்வொர்க் இல்லை. அனுபவமும் குறைவு. அதனால் செய்தித்தாள் விளம்பரங்களை பார்த்து வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். நேரடி நேர்காணல்களில் கலந்து கொண்டு 45 நாட்கள் இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, ஒரு வாய்ப்பு கிடைத்தது. NIS Sparta என்ற நிறுவனத்தில் இறுதிச் சுற்றுக்குள் சென்றதாக கூறியுள்ளார்.

அப்போது, "எனக்கு என்ன கேட்பது என்றும் தெரியாது. அவர்கள் எனக்குக் கையில் ரூ.15,000 கொடுத்தார்கள். அது எனக்காக பெரிய விஷயம்!" என்று கூறியுள்ளார். அவரது முதல் மாத சம்பளம் ரூ.14,746. ஆனால் அங்கே வேலை செய்யும் பிறர் எல்லாரும் மேலாண்மை பட்டதாரிகள். அவர்களோடு ஒப்பிடும்போது, தன்னம்பிக்கை குறைவாக இருப்பதை அவர் உணர்ந்தார். அதுவே MBA படிப்பை தொடர வேண்டிய தேவையை உணர்த்தியது.
தந்தையிடம் முதல் முறையாக கடன்: அவர் ISB-யில் ஒரு வருட MBA படிப்பைத் தேர்ந்தெடுத்தார். செலவு அதிகம். இதனால், குடும்பத்தில் முதல் முறையாக கடன் வாங்கினார். "MBA முடிந்த பிறகு மாதம் ரூ.35,000 சம்பளம் கிடைக்கும் என்று நம்பினேன். இதற்காக ஒரு 'பந்தயம்' போட்டேன்." என்று கூறியுள்ளார். MBA முடிந்ததும், வேலை கிடைக்கவில்லை. BCG நேர்காணலில் தோல்வி. AT Kearney இரண்டாவது சுற்றில் தடுமாற்றம். ஆனால், யாரோ ஒருவர் அவரின் திறமையை நம்பி, ஒரு வாய்ப்பு அளித்தார். அந்த வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். அந்த நம்பிக்கையையும் நிவர்த்தி செய்தார். AT Kearney-யில் ஆண்டு சம்பளமாக ரூ.12 லட்சம் பெற்றார். வெறும் 18 மாதங்களில் வேகமாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியேறுவதற்குள் அவரது ஆண்டு சம்பளம் ரூ.33 லட்சமாக இருந்தது.தெளிவான வளர்ச்சி : 24 வயதில் - மாத சம்பளம் ரூ.14,746 ஆகவும், 26 வயதில் - ஆண்டு சம்பளம் ரூ.12 லட்சம் ஆகவும், 29 வயதில் - ஆண்டு சம்பளம் ரூ.33 லட்சம் ஆகவும் உயர்ந்தது.
அவர் ஒரு நிறுவனம் தொடங்கும் வேளையில், நிலையான வேலை, அதிக சம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை எல்லாம் இருந்தது. ஆனாலும், அவர் அதையெல்லாம் விட்டு, என்னால் வளர முடியும் என்று நினைத்த வழியை தேர்ந்தெடுத்தார். அவர் தன்னை நம்பி, தைரியமான முடிவு எடுத்தார். அந்த முடிவு தான், அவருடைய வாழ்க்கையை தற்போது முழுமையாக மாற்றியுள்ளது.
இளம் தலைமுறைக்கு இது ஒரு முக்கியமான பாடம் : தன்னம்பிக்கை, இடைவிடாத முயற்சி, மற்றும் வாய்ப்பு வந்தபோது அதை முழுமையாகப் பயன்படுத்தும் மனநிலை இருந்தால் வளர்ச்சி நிச்சயம். அங்கூர் வாரிகூவின் பயணம் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications