நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவில் நினைவுச்சின்னம் ஒன்று இடிக்கப்பட்ட தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 260 அடி உயரமுள்ள நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரட்டை கோபுரங்கள்
நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் நேற்று இடிக்கப்பட்டது என்பதும் சட்டத்துக்கு விரோதமாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டடத்தின் இடிக்கும் முறையை பார்ப்பதற்காக ஏராளமானோர் குவிந்தனர் என்பதும் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
லாட்வியா நினைவுத்தூண்
இந்த நிலையில் நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்டு 25 ஆம் தேதி லாட்வியா என்ற பகுதியில் உள்ள 260 அடி உயரமான கான்கிரீட் தூண் இடிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சோவியத் ஆட்சியின் சின்னங்களில் முக்கியமான ஒன்றாக இருந்த இந்த தூண் இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூண் இடிப்பு
ஜெர்மனியின் நாசி அரசுக்கு எதிராக சோவியத் ரஷ்யா போர் தொடுத்து பெற்ற வெற்றியின் நினைவுச்சின்னம் தான் இந்த லாட்வியா தூண். தற்போது சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனி நாடாக லாட்வியா இருக்கும் நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து இந்த தூண் இடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
நேரடி ஒளிபரப்பு
மத்திய ரிகா என்ற பகுதியில் இருந்த 260 அடி உயரமான இந்த தூண் இடிக்கப்பட்டதை அடுத்து இந்த தூண் அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. இதனால் விக்டரி பூங்காவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தூண் இடிக்கப்பட்ட நிகழ்வை லாட்வியன் ஊடகங்கள் பார்வையாளர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பியது. இந்த தூண் இடிக்கப்பட்டபோது சிலர் லாட்வியா கொடிகளை கையில் வைத்துக்கொண்டு ஆரவாரம் செய்தனர்.
ஐந்து கோபுரங்கள்
இந்த தூணின் மேல் மூன்று சோவியத் நட்சத்திரங்களுடன் ஐந்து கோபுரங்களால் ஆனது என்பதும் தாய்நாட்டின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரு பெண் தனது கைகளை உயர்த்திக் கொண்டு இருப்பது போல் இந்த தூண் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம்
1985ஆம் ஆண்டு இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது என்பதும், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தபோது கட்டப்பட்ட இந்த தூண், 1991ஆம் ஆண்டு லாட்வியா ரஷ்யாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பின் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications