இமயமலைச் சாரலில் உள்ள ரூர்க்கியைச் சேர்ந்தவர் டாக்டர் அன்ஷு ரதி.
அவரது சமையலறையில் இருந்து எப்போதுமே ஒரு தெய்வீக மணம் கமழும்.
இந்தியாவின் சிறப்புமிக்க சீரகம், வெந்தயத்தின் ஆழ்ந்த மணம் எப்போதுமே வீசிக் கொண்டே இருக்கும்.
எனது உள்ளங்கையில் வைத்து உலர்ந்த வெந்தய இலைகளை நசுக்கினால் வாசம் அப்படி வீசும். என் கணவருக்கு சீரகம் சேர்த்த டீ ரொம்பவே பிடிக்கும்.
அந்த டீயைக் குடித்தால் புத்துணர்வு உடலில் பெருக்கெடுக்கும் என பெருமையுடனும், புன்னகையுடனும் கூறுகிறார் அன்ஷு ரதி.

தொழில்முறையில் ஒரு டாக்டராக இருந்தாலும் அன்ஷு ரதி தனது தோட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பழ வகைகள், காய்கறிகள், மூலிகைகள், மசாலாப் பொருட்களை விளைவித்துள்ளார். இத்துடன் அவரது வீட்டு மாடியில் 1500 சதுர அடி பரப்பில் தோட்டத்தை அமைத்துள்ளார்.
தனது தோட்டத்தில் அமுக்குரா கிழங்கு, பேசில், ஓரிகானோ, மஞ்சள், கருமிளகு, குங்குமப்பூ, கிராம்பு, ஜாதிக்காய், சோம்பு, வெந்தயம், பே லீஃப், பட்டை, பெருங்காயம், மிளகாய், கொத்துமல்லி, கலோஞ்சி, ஏலக்காய் ஆகியவற்றை விளைவிக்கிறார்.
இந்த ஐட்டங்களையெல்லாம் எப்படி எளிதாக வளர்ப்பது என்ற விளக்கத்தையும் வருவோர்க்கு இலவசமாக சொல்கிறார். உத்தராகண்ட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப டாக்டர் அன்ஷு ரதி 15 வகையான மசாலா பொருட்களை சாகுபடி செய்கிறார்.
இந்தியாவில் பலதரப்பட்ட தட்பவெப்ப சூழ்நிலைகள் இருப்பதால் அவரவர் பகுதியின் நிலைக்கேற்ப பயிர்களை வளர்க்கலாம் என்கிறார் டாக்டர் அன்ஷு ரதி. எடுத்துக்காட்டாக குளிர்காலமான அக்டோபர், நவம்பரில் கொத்துமல்லி, கருமிளகு, சீரகத்தை வளர்க்கலாம். மே, ஜூன் மாதங்களில் மஞ்சளை விளைவிக்கலாம்.
முதன்முதலாக தோட்டக்கலையில் இறங்குபவர்கள் செடிகளை நர்சரியில் வாங்குவது நல்லது என்று டாக்டர் அன்ஷு ரதி பரிந்துரைக்கிறார். நீங்கள் விதைகளிலிருந்து மசாலாப் பொருட்களை வளர்க்க விரும்பினால், அவற்றை முளை விடுவதற்கு ஊறவைக்க வேண்டும்.
ஏலக்காய், கொத்தமல்லி போன்ற பெரிய விதைகளில் மட்டுமே இந்த செயல்முறை தேவைப்படுகிறது. விதைப்பதற்கு முன் அவற்றை ஒரே இரவில் ஊறவைக்கலாம். சீரகம், பெருஞ்சீரகம், கடுகு போன்ற சிறிய விதைகளில் இப்படிச் செய்யத் தேவையில்லை என்கிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், பெருஞ்சீரகம் 7 முதல் 15 நாட்கள், சீரகம் 45 நாட்கள், கொத்தமல்லி விதைகள் 15 நாட்கள் தேவைப்படும், வெந்தயம் மூன்றே நாட்களில் முளைக்கும் என்றார்.
இந்த விதைகளை சிறிய கப்களில் விதைக்க வேண்டும். அந்த விதைகள் முளைத்த பிறகு, செடியை 12 அங்குல அளவுள்ள பெரிய தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும். ஒரு வாரத்துக்கு நிழலில் காய வைக்கவும், பின்னர் நேரடி சூரிய ஒளியில் வைக்கவும்.
மசாலாப் பொருட்களை பயிரிட மணல்பாங்கான மண்ணை பரிந்துரைக்கிறார். கங்கை, யமுனை நதிகளுக்கு இடையில் மணல்பாங்கான நிலம்தான் இருக்கிறது. அங்கு வசிக்கும் டாக்டர் அன்ஷு ரதி மண்ணின் கலவை பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. மற்ற பகுதிகளில் உள்ள தோட்டக்காரர்கள் மண்ணை சோதிக்க வேண்டும் என்கிறார்.
மண்ணின் தன்மையை அறிந்து கொள்ள ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து, அதை நனைத்து, அதை உருண்டையாக பிடிக்கவும். உருண்டையை இலகுவாக பிடிக்க முடிந்தால் அதில் களிமண் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட மண்ணில் 20 முதல் 30 சதவிகிதம் மணலை கலக்கவும். அது நொறுங்கலாகும்வரை மண் சேர்க்க வேண்டும். அத்துடன் 20 முதல் 30 சதவிகிதம் மாட்டுச் சாண உரம் மற்றும் ஒரு கைப்பிடி வேப்பம்பூ (கேக்) தூள் ஆகியவற்றைக் கலக்கவும்.
டாக்டர் அன்ஷு, பே இலை, குங்குமப்பூ போன்ற மசாலாப் பொருட்களை பயிரிட மணல் கலந்த மண்ணைப் பரிந்துரைக்கிறார். "ஏற்கனவே மாட்டு சாணம் உரம் மற்றும் வேப்பங்கொட்டை மண்ணில் சேர்த்திருப்பதால், அடிக்கடி மண்ணை உரமாக்க வேண்டிய அவசியமில்லை. பூக்கும் பருவத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே, தொட்டியில் மண்புழு உரம் ஒரு பிடி சேர்க்கவும் என்று அன்ஷு ரதி கூறுகிறார்.
வெவ்வேறு மசாலாப் பொருட்கள் பூக்கும் மற்றும் உற்பத்தியின் பல்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதாக டாக்டர் அன்ஷு கூறுகிறார். சீரகம், கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்கள் ஐந்து மாதங்களுக்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும், அதே சமயம் கருப்பு மிளகு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் எடுக்கும். ஏலக்காய் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்கிறார்.
இடைப்பட்ட நாட்களில், அவர் தனது சமையலறை பெட்டிகளில் சீரகம், கலோஞ்சி விதைகள், வெந்தயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றைக் குவித்து வருகிறார். சந்தையில் கிடைக்கும் மசாலாப் பொருட்களுடன் ஒப்பிடும்போது இந்த மசாலாப் பொருட்களுக்கு ஒரு தனி மணம் இருப்பதாக டாக்டர் அன்ஷு கூறுகிறார்.
ரசாயனங்கள், தீங்கு விளைவிக்கும் உரங்கள், வண்ணங்கள் மற்றும் சேர்க்கைகள் ஆகியவற்றின் பயன்பாடு வணிக ரீதியாக மசாலாப் பொருட்களில் பெரும் அபாயத்தை உருவாக்கும். இந்த உதவிக்குறிப்புகள் மூலம், உங்கள் சொந்த மசாலாப் பொருட்களை வீட்டிலேயே வளர்த்து, உங்கள் குடும்பத்தை நச்சு மசாலாப் பொருட்களின் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றலாம் என்று டாக்டர் அன்ஷு ரதி அறிவுறுத்துகிறார்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications