சென்னை: மும்பை பங்குச்சந்தையில் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பங்கு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சீனாவின் மிகப்பெரிய நிதியியல் சேவை நிறுவனமான ஆண்ட் குரூப்பின் கிளை நிறுவனமான ஆண்ட்ஃபின் சிங்கப்பூர், சோமேட்டோ நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளின் இருப்பில் ஒரு பகுதியை 408 மில்லியன் டாலர் அதாவது 3,422.84 கோடி ரூபாய் மதிப்புக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
சிஎன்பிசி-டிவி18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆண்ட் ஃபின் சிங்கப்பூர், 13.6 கோடி பங்குகள் அல்லது 1.54% பங்குகளைச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) பிளாக் டீல் வாயிலாக விற்பனை செய்ய உள்ளது. இந்த பிளாக் டீல் விற்பனையில், குறைந்தபட்ச விலை ஒரு பங்கிற்கு ரூ. 251.68 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இது திங்கள் கிழமை சோமேட்டோவின் இறுதி விலையான ரூ.262.3-ல் இருந்து 4% தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு ஜூன் காலாண்டின் இறுதியில், ஆண்ட் ஃபின் சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சோமேட்டோவில் 37.38 கோடி பங்குகள் அல்லது 4.3% பங்குகளை வைத்திருந்தது.
இது இந்த ஆண்டு சீன முதலீட்டாளரால் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பங்கு விற்பனையாகும். இதற்கு முன்னர், மார்ச் மாதத்தில், ஆண்ட் ஃபின் ரூ.2,827 கோடி மதிப்புள்ள 9.7 கோடி சோமேட்டோ பங்குகளை பிளாக் டீல் வாயிலாக விற்றது.
சோமேட்டோவின் நிதி செயல்திறன் மேம்பட்டு வரும் நிலையில், இந்த பங்குகளை விற்பனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் சோமேட்டோ பங்கு பிஎஸ்இ-யில் ரூ. 280ஐ தொட்டது. இதற்கு முன்பு, உலகளாவிய தரகர் நிறுவனமான யூபிஎஸ், பங்கின் இலக்கு விலையை ரூ.260-ல் இருந்து ரூ. 320 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தீபேந்தர் கோயல் தலைமையிலான இந்த நிறுவனம் ரூ.253 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய ரூ.2 கோடி நிகர லாபத்தை விட பல மடங்கு அதிகம்.
2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சோமேட்டோ-வின் இயக்க வருவாய் 74% அதிகரித்து ரூ.4,206 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.2,416 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.3,562 கோடியாக இருந்த இயக்க வருவாய் 18% அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications