செயற்கை நுண்ணறிவு ஒரு சக்திவாய்ந்த கருவி என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இதை குற்றவாளிகள், அரசு உதவியில் இயங்கும் அமைப்புகள், ஹேக்கர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொய் செய்தி பரப்புபவர்கள் மிகவும் தவறாக பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளதாக ஆந்திரோபிக் தளம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள Threat Intelligence அறிக்கையில், எங்களுடைய ஏஐ மாடல்களை ஏவுகணை தயாரிக்க, ஆபத்தான வெடிக்குண்டு தயாரிக்கவும் பயன்படுத்தியதை தாண்டி தற்போது பல அமைப்புகள், பல ஆபத்தான குற்றவாளிகள் கொடிய வைரஸ் உருவாக்கி அதை பயோ ஆயுதமாக உருவாக்கவும், பல தனிநபர், சிறுபான்மையினர் மக்களை கண்காணிக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் கிளாட் மாடலை திட்டமிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தனது 154 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட காரணம் உள்ளது, எங்களுடைய சேவைகளை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவித்து அதன் செயல்பாடுகளை முடக்கி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை வெளிப்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் சில விஞ்ஞானிகள் பயோ ஆயுதம் உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளது குறித்தும், அதை எப்படியெல்லாம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்தும் 5 ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கவனிக்கும் வகையில் சிக்குன்குனியாக குறித்து ஒரு விஞ்ஞானி மிகவும் தீவிரமாக கிளாட் ஏஐ மாடல் வைத்து ஆராய்ச்சி செய்துள்ளதை தெரிவித்துள்ளது.

இதேபோல் கிளாட் ஏஐ தளத்தை உளவு, தனிநபர் கண்காணிப்பில் துவங்கி துப்பாக்கி, ஏவுகணை, அணுகுண்டு, ஆயுதம் தாங்கிய டிரோன் உருவாக்குவது குறித்தும் பல நாடுகளை சேர்ந்த அமைப்புகள் ஆராயச்சி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் ஆந்திரோபிக் எந்த அமைப்பு, எந்த நபர் இத்தகைய பணிகளை செய்தது என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால் எந்த நாடு என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது, இதில் சீனா, ரஷ்யா, யெமன் ஆகியவை அதிகளவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் தான் ஆந்திரோபிக் நிறுவனத்தின் தலைவரான டாரியோ அமோடேய் ஏஐ தொழில்நுட்ப துறை மொத்தமாக தங்களுடைய ஏஐ மாடல் மேம்பாட்டு பணிகளின் வேகத்தை குறைக்க வேண்டும். ஏஐ கட்டமைப்புகள் நம் கையைவிட்டு போகும் முன்பு அதை முறையாக கட்டுப்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என கூறினார்.


Click it and Unblock the Notifications
