பங்குச் சந்தையில் ஏராளமான மல்டிபேக்கர் பங்குகள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு சமீபகாலமாக சிறப்பான வருவாயை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பவர் டிரான்ஸ்மிஷன் கேபிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான அபார் இண்டஸ்ட்ரீஸ் அதன் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வளர்ச்சியை கொடுத்துள்ளது. பங்கு வெறும் 5 ஆண்டுகளில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு 3,361 சதவீத மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கியுள்ளது.
அபார் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் நவம்பர் 18, 2024 வரை அதன் பங்குகள் ரூ. 8,772.30 ஆக உள்ளது. இது தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது சுமார் 3,361 சதவீதம் லாபத்தை வழங்கியுள்ளது. அதாவது, ஒரு முதலீட்டாளர் ரூ. 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தின் பங்குகளில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அது நேற்று வரை ரூ. 43.61 லட்சம் ஆக வருமானம் அளித்திருக்கும்.

நிறுவனத்தை பற்றி: அபார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பது மின்சாரம் மற்றும் உலோகவியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முக்கிய இந்திய நிறுவனமாகும். இது பவர் டிரான்ஸ்மிஷன் கடத்திகள் மற்றும் மின்மாற்றி ஆகியவற்றின் முன்னணி உலகளாவிய உற்பத்தியாளராக உள்ளது. இது சிறப்பு கேபிள்கள் மற்றும் லூப்ரிகண்டுகளை உள்ளடக்கிய பல்வேறு தயாரிப்புகளை செய்து வருகிறது. அதேபோல், அபார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பவர் டிரான்ஸ்மிஷன் கேபிள்கள்கள் உற்பத்தி உள்ளிட்ட மூன்று ஒட்டுமொத்த வணிகப் பிரிவுகளான கண்டக்டர்கள், டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் ஸ்பெஷாலிட்டி ஆயில்கள் (TSO), மற்றும் பவர்/டெலிகாம் கேபிள்கள் ஆகியவற்றிற்கு விரிவாக்கம் செய்துள்ளது.
காலாண்டு முடிவுகள்: நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டை பொருத்தவரை வருவாய் 16,153 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியண்டில் இதே காலாண்டில் 14,336 கோடி ரூபாயாக இருந்தது. இது ஆண்டுக்கு 12.67 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அபார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வருவாய் மற்றும் நிகர லாபம் கடந்த நான்கு ஆண்டுகளில் முறையே 21.45 சதவீதம் மற்றும் 57.23% சிஏஜிஆர் ஆக வளர்ச்சியடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டின்படி, அபார் இண்டஸ்ட்ரீஸ் ஏறத்தாழ ரூ.6,615 கோடிகள் ஆர்டர் புக் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது அதன் வணிக செங்குத்துகளில் வலுவான தேவைகளை கொண்டுள்ளது. காலாண்டில் புதிய ஆர்டர் வரவுகள் ரூ. 2,234 கோடியாக வைத்துள்ளது. நிறுவனம் அதன் உள்நாட்டு சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை தொடர்ந்து அனுபவித்து வருகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு சாதகமாக உள்ளது.
நிறுவனத்தின் வளர்ச்சிகள்: அபார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ACSR இலிருந்து பிரீமியம் AL-59 கண்டக்டர்களுக்கு மூலோபாய ரீதியாக மாறுகிறது, அதே நேரத்தில் தற்போதுள்ள உள்கட்டமைப்பில் மறுகட்டுமான வாய்ப்புகளை செய்து வருகிறது. நிறுவனம் மக்கும் பண்புகளுடன் சிறப்பு செயற்கை மின்மாற்றி எண்ணெய்களை உருவாக்குகிறது. நிறுவனம் எதிர்கால வளர்ச்சி முயற்சிகளுக்கு வலுவான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
உலகளாவிய வணிகம்: அபார் இன்டஸ்ட்ரீஸ் 2023-24 நிதியாண்டில் உள்நாட்டு விற்பனையில் 54.8% வருவாயை கொண்டுள்ள நிலையில், இதில் 45.2% வருவாய் 140 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்வதன் மூலம் உலகளவில் வலுவான வளர்ச்சியாக உள்ளது. நிறுவனத்தின் பத்து உற்பத்தி வசதிகள், இந்தியாவில் ஒன்பது மற்றும் ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒன்று உட்பட, மேம்பட்ட சோதனை மையங்களைக் கொண்டுள்ளது, இது வலுவான R&D முயற்சிகள் மூலம் தரம் மற்றும் புதுமைகளை புகுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, காலை 9.20 மணியளவில் அபார் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சிறப்பான ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி பங்குகள் சுமார் 4.06% உயர்வில் ரூ.9179 ஆக வர்த்தகம் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications