டெல்லி: நாட்டின் முன்னணி டயர் நிறுவனமான அப்போலோ நிறுவனம், இருசக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து டயர்களையும் உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 10,064 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 2,47,592 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற முக்கியமான சந்தைகளில் கொரோனா வைரஸ் வெடித்ததன் காரணமாக வணிகத்தில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
ஊதியம் குறைப்பு
இந்த நிலையில் டயர் உற்பத்தியில் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தியாளரான அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிர்வாகம் 15 - 25% ஊதியக் குறைப்பினை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் ஓம்கர் கன்வார் மற்றும் நீரஜ் கன்வார் ஆகியோர் தலா 25% ஊதியக் குறைப்பை எடுத்துள்ளனர். அதே நேரத்தில் மூத்த நிர்வாகத்தினர் தங்கள் சம்பளத்தில் 15% குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
வர்த்தகம் முற்றிலும் பாதிப்பு
அப்பல்லோ டயர்ஸ் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் பன்னாட்டு இருப்பைக் கொண்டுள்ளது. ஆக உலகளவில் ஊதியக் குறைப்புகள் மூத்த நிர்வாகங்களையும் கொண்டுள்ளது. அதிலும் தற்போது உலகம் முழுவதிலும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸால் வாகனத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பல்லோ டயர்ஸ் மோசமான நிலையை எதிர்கொள்ளக் கூடும். இதனா நிறுவனம் நஷ்டத்தினை எதிர்கொள்ளக் கூடும் என்று ஒர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பு
ஐரோப்பாவில் கொரோனாவின் தாக்கத்தினால், வோல்க்ஸ்வேகன் மற்றும் ரெனால்ட் குரூப் பிஎஸ் ஏ உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலான நாடுகளில் பூட்டப்பட்டதன் விளைவாக தொழில்சாலைகளை மூட முடிவு செய்துள்ளதாக அப்பல்லோவின் வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
ஊதியக் குறைப்பு
வணிகத்தின் மீது கோவிட் -19 வைரஸ் வெடிப்புக்கு பிறகு மோசமான தாக்கத்தால் ஊழியர்களின் ஊதியக் குறைப்பை அறிவிக்கும் இரண்டாவது நிறுவனமாக உள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னணி விமான நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை அறிவித்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications