சென்னை: உலகின் முன்னணி டெக் மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் தனது தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவின் பாரிக்கை நியமித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிளின் உயர்மட்ட பதவியில் இந்தியர் ஒருவர் நுழைந்துள்ளார். ஆப்பிள் நிர்வாகம் அடுத்த சிஎப்ஓ-வாக யாரை நியமிப்பது என்பதில் பெரும் குழப்பத்தில் இருந்த வேளையில் வெளியிலிருந்து ஒருவரைக் கொண்டு வருவது சரியான முடிவாக இருக்காது என்பதை உணர்ந்து நிறுவனத்தில் இருக்கும் உள்நபரையே நியமித்துள்ளது.
கெவின் பாரிக் ஜனவரி 1, 2025 அன்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகத் தனது பணியைத் துவங்குவார். ஏற்கனவே இப்பதவியில் இருக்கும் லூகா மேஸ்ட்ரி இந்த பதவியிலிருந்து அதே நாளில் நிறுவனத்திற்குள்ளேயே வேறு பதவிக்கு மாற உள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தில் இந்த புதிய தலைமை மாற்றம், அடுத்த சில வாரத்தில் ஆப்பிள் ஐபோன் 16 உட்பட பல தயாரிப்புகளை வெளியிடுவதற்கு முன்னதாக நடந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த முறை அறிமுகம் செய்யும் ஆப்பிள் ப்ராடெக்ட்கள் அனைத்திலும் மிகப்பெரிய சாப்ட்வேர் அப்டேட் இருக்கும் என்று சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
உலகமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சார்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் என்ற பெயரில் புதிய AI அம்சங்களைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது ஆப்பிள். ஆப்பிள் சமீப காலமாக அதன் விற்பனையிலும், பங்கு மதிப்பிலும் தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வரும் வேளையில் கெவின் பாரிக் நியமனம் மற்றும் ஏஐ அப்டேட்கள் இந்த வீழ்ச்சியை தலைகீழாகப் புரட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தில் கெவின் பாரிக் 10 வருடத்திற்கும் அதிகமாக பணியாற்றி வருகிறார். புதிய CFO பதவி மூலம் விரைவில் கெவின் பாரிக் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர உள்ளார். இவர் தற்போது நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
ஆப்பிளுக்கு முன், பாரிக் தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் உயர் மட்ட தலைமைப் பதவிகளை வகித்தார்.
CFO பதவியில் இருந்து வெளியேறும் லூகா மேஸ்ட்ரி, ஜனவரி 1, 2025க்கு பின்பு நிறுவன சேவைகள் குழுக்களைத் தலைமை தாங்குவார் என்று ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் தகவல் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு மற்றும் நிலம் மற்றும் மேம்பாடு ஆகியவை அடங்கும். இவை தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அறிக்கை செய்யும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications