கொரோனாவின் இரண்டாம் அலைக்கு மத்தியில் பல நாடுகளும் கதிகலங்கி போயுள்ளன எனலாம். ஏனெனில் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது, அதனைவிட மோசமாக மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு மக்கள் பல லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
உலகின் பெரும்பாலான நாடுகளும், இந்த கொரோனாவால் பெரும் இழப்பினை கண்டுள்ளது என்றால் அது தவிர்க்க முடியா உண்மையே.
இதனால் பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வந்தன. எப்படி இருப்பினும் தடுப்பூசிகளும் தற்போது பல அமலுக்கு வந்துள்ளன.
வீட்டில் இருந்தே பணி
இதன் எதிரொலியாக ஏற்கனவே பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. லாக்டவுன் நடவடிக்கைகளிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்த ஊழியர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றே கூறலாம். ஏனெனில் இனி விரைவில் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்பலாம் என்ற நிலையும் நிலவி வருகின்றது.
பிளெக்ஸி முறையில் பணி
எனினும் பல நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால், இந்த நடைமுறையை நிரந்தரமாக அமல்படுத்தலாமே என கூறி வருகின்றன. சில நிறுவனங்கள் ஊழியர்கள் பிளெக்ஸி முறையில் பணியாற்றலாம் என்றும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள் இன்க் நிறுவனமும், ஊழியர்கள் செப்டம்பர் மாதம் முதல் அலுவலத்திற்கு வரலாம். ஆனால் பிளெக்ஸி முறையில் அலுவலகம் வரலாம் என அறிவித்துள்ளது.
மூன்று நாள் வரவேண்டும்
அதாவது வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அலுவலகம் வர வேண்டும் என அறிவித்துள்ளது. ஐபோன் உற்பத்தியாளர் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் குறைந்தபட்சம் பணியாளர்களை திரும்ப கூறியுள்ளது. இதே புதன் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம் என அறிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
ஊழியர்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தியதற்கு மத்தியில், தடுப்பூசிகள் கிடைப்பதையும், இதனால் ஊழியர்கள் போட்டுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். அதோடு தற்போது கொரோனா பரவல் குறையும் விகிதத்தினையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஏனெனில் கொரோனா காலத்திலும் சில ஊழியர்கள் ஆப்பிள் அலுவலகங்களில் தங்கி பணியாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications