கொரோனாவின் இரண்டாம் அலைக்கு மத்தியில் பல நாடுகளும் கதிகலங்கி போயுள்ளன எனலாம். ஏனெனில் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது, அதனைவிட மோசமாக மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு மக்கள் பல லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
உலகின் பெரும்பாலான நாடுகளும், இந்த கொரோனாவால் பெரும் இழப்பினை கண்டுள்ளது என்றால் அது தவிர்க்க முடியா உண்மையே.
இதனால் பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வந்தன. எப்படி இருப்பினும் தடுப்பூசிகளும் தற்போது பல அமலுக்கு வந்துள்ளன.
வீட்டில் இருந்தே பணி
இதன் எதிரொலியாக ஏற்கனவே பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. லாக்டவுன் நடவடிக்கைகளிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்த ஊழியர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றே கூறலாம். ஏனெனில் இனி விரைவில் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்பலாம் என்ற நிலையும் நிலவி வருகின்றது.
பிளெக்ஸி முறையில் பணி
எனினும் பல நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால், இந்த நடைமுறையை நிரந்தரமாக அமல்படுத்தலாமே என கூறி வருகின்றன. சில நிறுவனங்கள் ஊழியர்கள் பிளெக்ஸி முறையில் பணியாற்றலாம் என்றும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள் இன்க் நிறுவனமும், ஊழியர்கள் செப்டம்பர் மாதம் முதல் அலுவலத்திற்கு வரலாம். ஆனால் பிளெக்ஸி முறையில் அலுவலகம் வரலாம் என அறிவித்துள்ளது.
மூன்று நாள் வரவேண்டும்
அதாவது வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அலுவலகம் வர வேண்டும் என அறிவித்துள்ளது. ஐபோன் உற்பத்தியாளர் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் குறைந்தபட்சம் பணியாளர்களை திரும்ப கூறியுள்ளது. இதே புதன் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம் என அறிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
ஊழியர்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தியதற்கு மத்தியில், தடுப்பூசிகள் கிடைப்பதையும், இதனால் ஊழியர்கள் போட்டுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். அதோடு தற்போது கொரோனா பரவல் குறையும் விகிதத்தினையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஏனெனில் கொரோனா காலத்திலும் சில ஊழியர்கள் ஆப்பிள் அலுவலகங்களில் தங்கி பணியாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications