ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனை வருவாயை அறிவித்தார். அப்போது இந்தியாவில் 4 புதிய ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் 2 அதிகாரப்பூர்வ ஆப்பிள் கடைகள் மட்டுமே உள்ளன. ஒன்று BKC மும்பையிலும், மற்றொன்று DLF சாகேட்டிலும் உள்ளது.
டிம் குக், அனைத்துப் பகுதிகளிலும் ஐபோன் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், உலகளவில் சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவில், ஆப்பிள் நிறுவனம் தனது அதிகபட்ச வருவாயை எட்டியுள்ளது.

"ஐபோன் அனைத்து பகுதிகளிலும் நல்ல விற்பனை வளர்ச்சியைக் கண்டது. இதனால் செப்டம்பர் காலாண்டின் வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் சேவைகள் பிரிவும் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளிலும், அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், யுகே, கொரியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகளிலும் செப்டம்பர் காலாண்டின் வருவாய் சாதனைப் படைத்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் இந்தியாவில் நாங்கள் காணும் வளர்ச்சியால்,தொடர்ந்து உற்சாகமாக இருக்கிறோம்", என்று குக் கூறியுள்ளார்.
இந்த காலாண்டில், இந்திய சந்தையிலிருந்தும் ஐபேட் வருவாய் அதிகரித்துள்ளது. "ஐபேட் 7 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும். கூடுதலாக, மெக்ஸிகோ, பிரேசில், மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் தெற்காசியா போன்ற பல வளரும் சந்தைகளில் வலுவான செயல்திறனையும் நாங்கள் கண்டோம்" என்று ஆப்பிளின் மூத்த துணைத் தலைவரும் CFO-வுமான லூகா மேஸ்ட்ரி கூறினார்.
இந்தியாவில் அதிகமான கடைகளைத் திறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிடுவது பற்றிய செய்திகள் வெளியாவது இது முதல் முறை கிடையாது. இந்தியாவில் அதிக அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்களைத் திறக்க ஆப்பிள் செயல்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்தியாவில் நான்கு புதிய கடைகள் திறக்கப்படும் என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆப்பிள் ஸ்டோர்கள் எங்கு திறக்கப்பட உள்ளது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
புதிய கடைகள் பெங்களூரு, புனே மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதியில் மும்பையில் உள்ள மற்றொரு கடையுடன் திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை இங்கு கடைகள் திறக்கப்பட்டால் டெல்லி மற்றும் மும்பையில் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் இருக்கும். மேலும் அறிக்கைகள் உண்மையாக இருந்தால் பெங்களூரு மற்றும் புனேவில் புதியக் கடைகள் திறக்கப்படும்.
கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியின் படி, ஆப்பிள் இப்போது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை மதிப்பின் அடிப்படையில் 22 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 ஆகியவற்றை வெளியிட்டு, ஆப்பிள் நிறுவனம் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. உலகளவில், ஆப்பிள் செப்டம்பர் காலாண்டில் $94.9 பில்லியன் வருவாயைப் பதிவுசெய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications