ஒரு நிறுவனத்தில் பல வருடங்கள் இருந்து வேலை பார்ப்பது சற்று சிக்கலான விஷயம்தான். அங்குள்ள வேலை நமக்கு பிடிக்க வேண்டும், நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிற நபர்கள் உங்களுடன் நட்புடன் பழக வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் நல்லதாக அமைந்தால் மட்டுமே, ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியும். அதையும் மீறி சிலர் பல வருடங்கள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய கதைகளும் உண்டு. அதற்கு சான்றாய் கிறிஸ் எஸ்பினோசா என்ற நபர் ஆப்பிள் நிறுவனத்தில் 14 வயதிலிருந்து பணியாற்றி நீண்ட காலமாக நிறுவனத்தில் வேலை பார்த்த சாதனையை படைத்துள்ளார்.
கிறிஸ் எஸ்பினோசா என்ற நபர் 1977-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது அவர் உயர்நிலைப் பள்ளியில் படித்து கொண்டிருந்த 14 வயது மாணவர். அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய மிக நீண்டகால பணியாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

1976-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், முட்டாள்கள் தினத்தன்று ஆப்பிள் நிறுவனம் ஒரு குடோனில் நிறுவப்பட்டபோது எஸ்பினோசா ஆப்பிள் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்காக சேர்ந்துள்ளார். 1977-ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரின் கூட்டணிக்கு பின்பு முழுநேர ஊழியரானார் கிறிஸ் எஸ்பினோசா. கிறிஸ்துமஸ் சமயத்தில் Apple II BASIC செயல்பாட்டைச் சோதிப்பதுதான் எஸ்பினோசாவின் வேலையாகும்.
1985-ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறி, கல்வி நிறுவனமான NeXT-ஐ தொடங்கியபோது, ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த பணியாளராக எஸ்பினோசா இருந்தார். 1997-ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் NeXT-ஐ வாங்கிய பிறகு, ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கு திரும்பிய பின்னரும் கூட அவர் அந்த பதவியையே வகித்தார்.
எஸ்பினோசா 1978-இல் ஒரு நேர்காணலில் 3 முக்கிய வார்த்தைகளைக் கூறினார். அவை "பச்சாதாபம் - உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள், அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கவனம் செலுத்துங்கள் - வேலையை சிறப்பாகச் செய்யுங்கள். கணக்கிடுங்கள் - நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் மதிப்பீடு செய்யுங்கள் என்று கூறினார்.
ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த கிறிஸ் எஸ்பினோசாவின் கதை, ஒரு நிறுவனத்தின் நீண்ட பயணத்தில் ஒரு தனிநபரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதற்கு சான்று. எதிர்காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றை ஆராயும் ஆர்வலர்களுக்கு எஸ்பினோசாவின் அனுபவங்கள் நிச்சயம் மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications