இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு பாக்ஸ்கான், சாம்சங் மட்டுமே ஸ்மார்ட்போன்களை தயாரித்து வந்த நிலையில் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போருக்கு பின், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தனது உற்பத்தி தளத்தை மொத்தமாக வெளியேற்ற முடிவு செய்தது.
இந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதற்காக மத்திய அரசு சீனாவில் இருந்து வெளியேறி வரும் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களுக்காக உற்பத்தி இணைப்பு ஊக்கத்திட்டம் (PLI) ஆகஸ்ட் 2021 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் என்னவெல்லாம் நடந்துள்ளது தெரியுமா..?

ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உருவாக்கிய உற்பத்தி கட்டமைப்புகளில் நேரடியாக 1,50,000க்கும் மேற்பட்ட ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக அளவில் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் உருவாக்கிய 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை 19-24 வயதுடைய முதல் தலைமுறை வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நேரடி வேலைவாய்ப்புகளைத் தாண்டி 3 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
PLI திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தரவுகளை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன் படி இந்த தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுபோக ஆப்பிள் நிறுவனம் நேரடியாக இந்தியாவில் கிட்டத்தட்ட 3,000 பேரை பணியமர்த்தியுள்ளது.
மேலும், iOS app உருவாக்கத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் கடந்த 32 மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் நடந்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. PLI திட்டத்துடன் இணைந்து, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்துள்ளது கடந்த ஆண்டு 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன் ஏற்றுமதி செய்து பிராண்டாக திகழ்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஒப்பந்த உற்பத்தியாளர்களான Foxconn, Wistron மற்றும் Pegatron ஆகியோர் மூலம் ஐபோன்-களை உருவாக்கி வருகிறது. இதில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் இந்திய பிரிவு கடந்த ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது.
PLI திட்டத்தின் கீழ் சுமார் 77000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியதற்கான சலுகைகளை Foxconn, Wistron மற்றும் Pegatron ஆகியோர் பெற்றுள்ளனர். இதில் பாக்ஸ்கான் 41000 ஊழியர்களுக்கான பங்கீட்டையும், விஸ்திரான் 27,300 ஊழியர்களையும், பெகாட்ரான் 9200 ஊழியர்களுக்கான பங்கீட்டையும் பெற்றுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் Foxconn மற்றும் Pegatron உற்பத்தி தளங்கள் சென்னையில் உள்ளது, விஸ்திரான் பெங்களூர் தொழிற்சாலை கைப்பற்றிய டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் மாபெரும் அசம்பிளி தொழிற்சாலையைக் கொண்டு உள்ளது.
பிப்ரவரி வரையிலான 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன் உற்பத்தி செய்துள்ளது, இது சந்தை மதிப்பில் 1.6 லட்சம் கோடி ரூபாயாகும். ஆப்பிள் சப்ளைர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications