ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் முறையாக ஐபோன் அறிமுகம் செய்த நாளில் இருந்து ஐபோன் புகழ் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் சமீபத்திய வருடங்களில் அதிகப்படியான விமர்சனங்களை ஆப்பிள் மற்றும் ஐபோன் எதிர்கொண்டு வருகிறது.
இந்த தடுமாற்றத்தை சமாளிக்க ஆப்பிள் புதிய சந்தைகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை துவங்கி இன்று லாபத்தையும், வர்த்தகத்தையும் அள்ளி வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பணமழையில் கொண்டாடி வருகிறது.

இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகள் நீண்ட காலமாக விற்கப்பட்டு வந்தாலும் கடந்த சில வருடங்களாக தான் நேரடி விற்பனையை துவங்கியது. சமீபத்தில் ஆப்பிள் தனது நேரடி விற்பனை கிளைகளை திறந்து இந்திய மக்களை கூடுதலாக கவர்ந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டின் விற்பனை மற்றும் லாப அளவீட்டை ஆப்பிள் நிறுவனம் மார்தட்டிக் கொண்டு வெளியிட்டு உள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் வருவாய் கிட்டத்தட்ட 50000 கோடி ரூபாய் அளவீட்டை தொட்டு புதிய மைல்கல்-ஐ அடைந்துள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டை காட்டிலும் 48 சதவீதம் அதிகரித்து 49,321 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மொத்த லாபம் 76 சதவீதம் அதிகரித்து 2,229 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என RoC அமைப்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கடந்த 5 வருடத்தில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்த பிரம்மாண்ட வளர்ச்சியாக இது உள்ளது. இதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கீடு அதிகரித்துள்ளது.
மேலும் லாபம் 76 சதவீதம் அதிகரிக்க உள்நாட்டு தயாரிப்பில் உதிரிபாகங்கள் கொள்முதல் செலவுகள் குறைக்கப்பட்டதன் மூலம் வந்தது என சந்தை ஆய்வுகள் கூறப்படும் வேளையில் காரணத்தை ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
மேலும் 2023-24 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் தனது ஆன்லைன் மற்றும் புதிய கடைகள் மூலம் ஆப்லைன் வர்த்தகத்தையும் வலிமைப்படுத்தியிருக்கும் காரணத்தால் 60000 கோடி முதல் 75000 கோடி ரூபாய் வரையிலான வருவாய் பெற வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக ஐபோன் 15 அறிமுகம் அதற்கு கைகொடுக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவில் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதோடு இந்தியாவில் ஐபோன் தயாரிப்பும், ஏற்றுமதியும் அடுத்த சில வருடங்களில் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஐபோன் மற்றும் பிற ஆப்பிள் கருவிகளுக்கான உதிரிபாகங்களும் இந்தியாவில் அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளதால் வரும் ஆண்டுகளில் இதன் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications