அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போரின் தீவிரம் குறைந்துவிட்டாலும், சீனாவின் வளர்ச்சியை முட்டுக்கட்டை போடும் வகையில் பல அறிவிப்புகளையும், தடைகளையும் அமெரிக்கா விதித்து வந்தது. இதில் முக்கியமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்புத் துறையில் அதிகப்படியான நெருக்கடியைக் கொடுத்தது.
அமெரிக்காவின் இந்த நெருக்கடி காரணமாகத் தான் ஆப்பிள் நிறுவனம் தனது பெரும் பகுதி உற்பத்தியை இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு மாற்றியது. இந்த உற்பத்தி மாற்றம் வாயிலாகச் சீனாவின் வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் தடைகளைத் தாண்டி வர்த்தகத்திலும், சிப் தொழில்நுட்பத்திலும் வென்றுள்ளதைக் காட்டும் விதமாகத் தற்போது சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சீன அரசு கடந்த சில மாதங்களாக ஐபோன் பயன்படுத்துவதை மொத்தமாக நிறுத்த அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது, இதைத் தொடர்ந்து சீன மக்களையும் ஆப்பிள் ஐபோன்களுக்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்தக் கேட்டுக்கொண்டது.
இதன் எதிரொலியாகச் சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி அடைந்து, உள்நாட்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த முக்கியமான மாற்றம் சீனாவின் உள்நாட்டு தயாரிப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
மேலும் சீன அரசு மற்றும் மக்களின் முடிவையொட்டி அந்நாட்டின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனையாளரான சியோமி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்தது.
சியோமி-யின் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள், பிற வணிக முயற்சிகள் மீதான முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்த காரணத்தால் ஜூன் மாதத்தில் இருந்து சியோமி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் $20 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
சியோமி நிறுவனம் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது, சியோமி பங்குகள் ஜூன் மாதத்தில் இருந்து சுமார் 60% க்கும் அதிகமாக உயர்ந்தது, ஹாங் செங் டெக் குறியீட்டில் டாப் நிறுவனமாக மாறியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான சீனாவில் ஐபோன் ஆதிக்கம் பல ஆண்டுகளாக உயர்ந்து வந்த நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்பு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் உயர துவங்கியுள்ளது. இதனால் சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம், வருவாய் ஆகியவை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் மேட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஐபோன்களை அனைத்து பிரிவுகளிலும் தகர்த்துச் சிறப்பான ஸ்மார்ட்போனாக உருவெடுத்து சீன மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அக்டோபர் பிற்பகுதியில் அறிமுகமான
Xiaomiயின் 14 சீரியஸ் போன்களுக்கு இதுவரையில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் ஆப்பிள் 15 பல பிரச்சனைகள் உடன் அறிமுகமாகி மோசமான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் ஜப்பான் நாட்டைத் தொடர்ந்து சீனாவிலும் ஆப்பிள் ஆதிக்கம் உடைகிறது, அடுத்தச் சில காலாண்டில் ஆப்பிள் வருவாய், லாபத்தில் பெரும் ஓட்டையைப் பார்க்க முடியும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications