அமெரிக்கா ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் கடந்த ஆண்டு அதன் மொத்த வருவாயில் 18 சதவீதத்தைக் சீனா சந்தையில் பெற்றது மூலம் இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் மூன்றாவது பெரிய சந்தையாக விளங்குகிறது.
ஆப்பிளின் பெரும்பாலான தயாரிப்புகளை அதன் மிகப்பெரிய சப்ளையரான ஃபாக்ஸ்கான் சீனாவில் தான் தயாரிக்கிறது. ஐபோன் தயாரிப்பின் மிகப் பெரிய தளமாக சீனா விளங்குகிறது.

இந்நிலையில் சீன அரசு ஊழியர்கள் ஐபோன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சிடைய செய்தது.
கடந்த இரண்டு நாட்களில் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பீடு 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக சரிந்து சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை எதிர்கொண்டது. பெய்ஜிங் மத்திய அரசு நிறுவன அதிகாரிகளுக்கு ஐபோன்களை அலுவலகத்துக்குள் கொண்டு வரவோ அல்லது வேலைக்காக பயன்படுத்தவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அடுத்த நாள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அரசாங்க ஆதரவு நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் மீதும் தடை விதிக்கப்படலாம் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது. ஐபோன் 15 அறிமுகத்துக்கு முன்னதாக இந்த அறிக்கைகள் வந்துள்ளன.
செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் ஆப்பிளின் நிறுவனத்தின் முக்கியமான வருடாந்திர விழாவில் ஐபோன் 15 மற்றும் இதர முக்கிய கருவிகள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் உலகின் மிக உயர்ந்த பங்குச் சந்தை மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, இது $2.8 டிரில்லியனுக்கு அருகில் உள்ளது, சீன அறிவிப்பு மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் சில சப்ளையர்களின் பங்குகளும் சரிந்துள்ளன.
ஸ்மார்ட்போன் சிப்களின் உலகின் மிகப்பெரிய சப்ளையர் குவால்காம், வியாழன் அன்று 7 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. தென் கொரியாவின் SK Hynix இன் பங்குகள் வெள்ளியன்று சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. அமெரிக்கா - சீனா மத்தியிலான பதற்றங்கள் ஐபோன் தடை அறிவிப்பு மூலம் கூடுதலாக மோசமடைந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications