உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில் தனது டெவலப்பர் கூட்டத்தில் அறிமுகம் செய்த விஷன் ப்ரோ என் AR - VR ஹெட்செட் குறித்த ரிவ்யூவால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பாக முன்னணி தமிழ் யூடியூபர்கள் மத்தியில் பெரிய சண்டை உருவாகி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் உலகிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமான வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். புதன்கிழமை அமெரிக்க வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 3 டிரில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதுகிட்டத்தட்ட இந்திய ஜிடிபி-க்கு இணையான ஒன்று.

ஆப்பிள் நிறுவன பங்குகள் புதன்கிழமை வர்த்தக முடிவில் 0.6 சதவீதம் உயர்ந்து 189.25 டாலர் உடன் முடிவடைந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.98 டிரில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு அதிகரித்து வந்த நிலையில் முதல் நிறுவனமாக ஆப்பிள் 3 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது.
3 டிரில்லியன் டாலர் என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்டால் ..? ரொம்ப பெரியது 1 டிரில்லியன் எனில் 1 லட்சம் கோடி, இதுவே டாலர் ரூபாய் கணக்கிட்டாலே் 82 லட்சம் கோடி ரூபாய், அப்போ 3 டிரில்லியன் டாலர் எனில் 246 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது ஆப்பிள்.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.75 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை தொட்டு உள்ளதாக தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2 டிரில்லியன் டாலராக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3.75 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பீட்டின் இலக்கை விடவும் 3 மடங்கு அதிகம். ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடும் அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications