உலகின் முன்னணி ஐபோன் பிராண்டான ஆப்பிள் நிறுவனத்தின் முழு கவனமும் தற்போது இந்திய சந்தை மீது தான் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ஐபோன் விற்பனையும் ஐபோன் உற்பத்தியும் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய அதே வேளையில் அதிக லாபம் பார்க்கக்கூடிய ஒரு சந்தையாக இந்தியா மாறி இருக்கிறது.
இந்தியாவில் மேலும் தங்களின் இருப்பை வலுப்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஒரு தொழிலில் கால் பதிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் பே , போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. மக்கள் தற்போது எங்கு சென்றாலும் கையில் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவையை இது குறைத்துவிட்டது.

நம் போனை கையில் வைத்திருந்தால் போது எங்கிருந்தாலும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பும் வாய்ப்பினை யுபிஐ செயலிகள் ஏற்படுத்தி தந்துள்ளன. பெரும்பாலான மக்கள்ன் யுபிஐ வாயிலாகவே பண பரிமாற்றங்களை மேற்கொள்கின்றனர். வயதானவர்கள் கூட பயன்படுத்தும் வகையில் இது எளிதாக இருப்பதே இதற்கு காரணம்.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் யுபிஐ சேவையை வழங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பே எனும் செயலியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஐசிஐசிஐ , ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் போன்ற வங்கிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாக இருக்கிறது.

குறிப்பாக இந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே ஆப்பிள் பயனர்களுக்கு இந்த செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆப்பிள் செயலி தற்போது இந்தியர்கள் பயன்படுத்தக்கூடிய கூகுள் பே ,பேடிஎம் போன்ற செயலிகளை விட வேகமாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பக்கூடிய ஒரு செயலியாக இருக்கும் வகையில் திட்டமிடப்படுகிறது. மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்ற நிறுவனங்களுடனும் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
இந்தியாவில் தற்போது அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய யுபிஐ செயலிகளாக கூகுள் பே , போன் பே உள்ளிட்டவை இருக்கின்றன. கூகுள் பே ஆல்ஃபாபெட் நிறுவனத்திற்கு சொந்தமானது , போன் பே வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது, அமேசான் பே அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமானது. பேடிஎம்., பீம் யுபிஐ போன்றவை உள்நாட்டு தயாரிப்புகள். ஏற்கனவே இந்திய யுபிஐ சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய நிலையில் தற்போது ஆப்பிளும் இந்த தளத்தில் கால் பதிக்க முன் வந்திருக்கிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications

