இந்திய வர்த்தகச் சந்தையில் அனைத்து துறையிலும் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் நிலையில் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.
அதிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மார்ட்போன் சந்தையில் அமெரிக்கா நிறுவனமான ஆப்பிள் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துள்ளது அமெரிக்க நிறுவனங்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்திய வர்த்தக வளர்ச்சியைக் கண்டு ஆப்பிள் டிம் குக் புகழ்ந்து தள்ளியுள்ளார். அப்படி எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது...
ஆப்பிள் நிறுவனம்
ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வான டிம் குக் ஜூன் காலாண்டின் இந்திய வர்த்தகத்தில் சுமார் 2 மடங்கு அதிக வருவாய் பெற்றுள்ளதாகவும், இந்திய சந்தையில் ஏற்பட்ட மேக்ரோ எக்னாமிக் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
டிம் குக்
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 3 சதவீதமும், மொத்த வர்த்தகச் சந்தையில் 12 சதவீத வர்த்தகத்தையும் பெற்றுள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இரட்டிப்பு வருவாய் வளர்ச்சி
இந்நிலையில் டிம் குக் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது வளரும் நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் பெரிய ஆளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாகப் பிரேசில், இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் 2 இலக்க வளர்ச்சி, இந்தியாவில் இரட்டிப்பு வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
லூகா மேஸ்திரி
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான லூகா மேஸ்திரி (Luca Maestri) கூறுகையில் இந்தியாவில் தற்போது பல நிறுவனங்கள் ஆப்பிள் பொருட்களில் அதிகளவில் முதலீடு செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
விப்ரோ
குறிப்பாக விப்ரோ நிறுவனம் ஊழியர்களைத் தக்க வைப்பதற்காக மேக்புக் ஏர் லேப்டாப்-ஐ அதிகளவில் வாங்குவதாகத் தெரிவித்தார். இந்திய ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான ஊழியர்கள் வெளியேறி வருவது பெரும் பிரச்சனையாக உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications