ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி சப்ளையரான பாக்ஸ்கான், ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது. பல இடங்களில் ஆலைகளை கொண்டுள்ளது. இன்னும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகின்றது.
குறிப்பாக தமிழக்கத்தில் சென்னை மற்றும் ஓசூரில் முதலீடு செய்துள்ள பாக்ஸ்கான், கர்நாடகாவிலும் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது.
ஏற்கனவே ஆப்பிள் உதிரி பாகங்கள், ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் உற்பத்தி என பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
விரிவாக்கம்
தாய்வானை சேர்ந்த முன்னணி உற்பத்தியாளரான பாக்ஸ்கான் சீனாவினை தாண்டி, தற்போது பல்வேறு நாடுகளில் விரிவாக்கம் செய்து வருகின்றது. குறிப்பாக மிகப்பெரிய சந்தையான இந்தியாவினை பயன்படுத்திக் கொள்ள தொடர்ந்து விரிவாக்கம் செய்தும் வருகின்றது. இது ஆப்பிள் பொருட்கள் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி என அனைத்தையும் இங்கேயே உற்பத்தி செய்து விற்பனை செய்வதோடு, ஏற்றுமதியினையும் அதிகரிக்க பயன்படலாம்..
முதலீட்டு திட்டம்
இதற்கிடையில் தற்போது ஆப்பிளின் ஏர்போட்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் மேற்கொண்டு 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஆலை ஒன்றை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆலையில் குறிப்பாக வயர்லெஸ் ஏர்போன்கள் உற்பத்தி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்கானுடன் ஒப்பந்தம்
ஆப்பிள் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தினை தனது ஐபோன்களின் 70% அசெம்பிள் செய்யும் ஒப்பந்ததாரரான, பாக்ஸ்கானுடன் கூட்டணி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆப்பிள் உதிரி பாகங்கள் சப்ளையராக இருந்த பாக்ஸ்கான், இதன் பிறகு ஆப்பிள் ஏர்போன் சப்ளையராகவும் உருவெடுக்கலாம்.
சீனாவினை தாண்டி வெளியே
ஆப்பிளின் இந்த முயற்சி சீனாவினை முழுமையாக நம்பியிருக்காமல் இருக்க, விரிவாக்கம் செய்யப்படும் ஒன்றாக இருக்கலாம் என தெரிகின்றது. தற்போது சினாவின் முக்கிய சப்ளையர்கள் தான் ஏர்போட்களையும் சப்ளை செய்து வருகின்றனர்.
பாக்ஸ்கான் ஆர்வம்?
இது தகவல்கள் உண்மையா? அல்லது பொய்யா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் பாக்ஸ்கான் ஆப்பிளின் புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிகின்றது.
பாக்ஸ்கான் மட்டும் அல்ல, தாய்வானின் விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகட்ரான் கார்ப் நிறுவனங்கள், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து பல புதிய ஆர்டர்களை பெற்று வருகின்றன.
தெலுங்கானாவில் ஆலை பணி
பாக்ஸ்கானின் துணை நிறுவனமான பாக்ஸ்கான் இண்டர்கனெக்ட் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம், தெலுங்கானாவில் ஆலை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகின்றது. இந்த பணியானது 2024ன் இறுதியில் முடிவடையலாம் என தெரிகின்றது.
சீனா பிரச்சனையால்
சீனாவின் சமீபத்திய ஆண்டுகளாகவே கொரோனாவால் பெரிதும் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் மிகப்பெரிய ஆலையை கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கியது. இது உற்பத்தி பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க தொடங்கியது. எது எப்படியோ இதன் மூலம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது அதிகரிக்கலாம் என்பது நல்ல விஷயமே.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications