எஸ்பிஐயின் புதிய தலைவராக சல்லா சீனிவாசுலு செட்டி நியமனம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-ன் (SBI) புதிய தலைவராகச் சல்லா சீனிவாசுலு செட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஆகஸ்ட் 28 தேதி அல்லது அதற்குப் பிறகு அவரது பதவிக்காலம் தொடங்கும் என்று மத்திய அரசின் நியமனக் குழு அறிவித்துள்ளது. சீனிவாசுலு செட்டி இந்த பதவியில் மூன்று ஆண்டுகளுக்கு இருப்பார் என்று நியமனக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, ஜூலை 3 அன்று, மத்திய அரசின் அமைப்பான, நிதி சேவைகள் நிறுவனங்கள் பணியகம் (FSIB), எஸ்பிஐயின் தற்போதைய செயல்பாட்டு இயக்குனரான சீனிவாசுலு செட்டியை அடுத்த தலைவராகப் பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எஸ்பிஐயின் புதிய தலைவராக சல்லா சீனிவாசுலு செட்டி நியமனம்..!!

இதற்கிடையே, எஸ்பிஐயின் தற்போதைய துணை மேலாண்மை இயக்குனராக இருக்கும் ராணா அசுதோஷ் குமார் சிங்கை, வங்கியின் புதிய செயல்பாட்டு இயக்குனராக நியமிப்பதற்கு நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது பதவிக்காலம் பணியை ஏற்றுக்கொண்ட தேதியிலிருந்து 2027 ஜூன் 30 அன்று அவர் ஓய்வு பெறும் வரை தொடரும். இல்லையெனில் நிர்வாகம் அளிக்கும் நீடிப்பு வரையில் தொடரும்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் தற்போதைய தலைவர் தினேஷ் காரா, இவர் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில் இவ்வங்கியின் அடுத்த தலைவர் அதே நாளில் பதவி ஏற்க வேண்டும், இது மட்டும் அல்லாமல் இதற்கு முன்பே அனைத்து பொறுப்புகளையும் பெற்றுக்கொள்ள ஒருவரைத் தேர்வு செய்தாக வேண்டும்.

கடந்த சில மாதங்களாக இந்த முக்கிய பதவிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. பல திறமையான அதிகாரிகளை நேர்காணல் செய்த பின்னர், நிதி சேவைகள் நிறுவனங்கள் பணியகம் (FSIB) ஜூலை 3 அன்று சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டியின் பெயரை பரிந்துரைத்தது.

அவரது நீண்டகால அனுபவம் மற்றும் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக FSIB தெரிவித்துள்ளது.

எஸ்பிஐயின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டிக்கு முன்னால், தினேஷ் காரா தலைவராக இருந்தார். அவரது காலத்தில் வங்கி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இதேபோன்ற அல்லது இதை விட சிறப்பான செயல்திறனை புதிய தலைவர் வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் எஸ்பிஐ போன்ற வங்கியின் தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. புதிய தலைவர், வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டியின் இந்த நியமனம், வங்கித் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+