கொரோனா 2வது அலை இந்தியாவை மிகவும் மோசமான தாக்கியுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் இந்தியாவில் மருந்து விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகளவிலான மருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதன் எதிரொலியாகக் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் மருந்து விற்பனை 51.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மக்கள் சுமார் 15,662 கோடி ரூபாய் மதிப்பிற்கு மருந்து பொருட்களை வாங்கியுள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு நேரடி/மறைமுகம், உடல் நலத்தைப் பாதுகாத்தல் போன்ற காரணத்திற்காக மக்கள் அதிகளவிலான மருந்து பொருட்களை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் Anti-Infectives பிரிவைச் சார்ந்த மருந்துகள் விற்பனை இந்த ஏப்ரல் மாதத்தில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 134 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் ஊட்டசத்தி மருந்துகள் 76 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மருந்து விற்பனை சராசரியாக 9 சதவீதம் குறைந்து வந்த வேளையில் மார்ச் மாத துவக்கம் முதல் மருந்து விற்பனை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு துவங்கிய நாள் முதல் இந்திய பார்மா நிறுவனங்கள் மருந்து உற்பத்தியை மேம்படுத்தியது மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் விநியோகம் செய்வதிலும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications