கருப்பு பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.
அதேசமயம், அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் பல சிரமங்களை சந்தித்தனர் மேலும் தொழில்துறை சில இடர்பாடுகளை எதிர்கொண்டது. அதேசமயம் பண மதிப்பிழப்பு நடவடிக்யைால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டு மே மாதத்தில், புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று அறிவித்தது. மேலும் 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தங்கள் கையில் உள்ள 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை, 2000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக்கு திரும்பி விட்டது. இன்னும் ரூ.10 1000 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக தகவல். வங்கிகள் இனி 2000 நோட்டுகளை திரும்ப பெறாது என்றாலும், நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் அவற்றை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ தனிநபர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 1000 நோட்டை அறிமுகம் செய்ய உள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களை இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது. சமூக ஊடகங்களின் ஊகங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், 1000 ரூபாயை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. புதிய 1000 ரூபாய் நோட்டுக்கான நோக்கங்கள் இல்லை.
போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக போதுமான அளவு 500 ரூபாய் நோட்டுகள் உற்பத்தியை உயர்த்தி சாத்தியமான பண கிடைப்பு பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டது. இது தவிர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எழுச்சியானது, பணத்திற்கான தேவை குறைவதற்கும் பங்களித்துள்ளது. ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications