என்னது.. 1000 ரூபாய் நோட்டு ரிட்டர்ன்ஸா?.. மக்களை எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

கருப்பு பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.

அதேசமயம், அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் பல சிரமங்களை சந்தித்தனர் மேலும் தொழில்துறை சில இடர்பாடுகளை எதிர்கொண்டது. அதேசமயம் பண மதிப்பிழப்பு நடவடிக்யைால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

 என்னது.. 1000 ரூபாய் நோட்டு ரிட்டர்ன்ஸா?.. மக்களை எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டு மே மாதத்தில், புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று அறிவித்தது. மேலும் 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தங்கள் கையில் உள்ள 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை, 2000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக்கு திரும்பி விட்டது. இன்னும் ரூ.10 1000 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக தகவல். வங்கிகள் இனி 2000 நோட்டுகளை திரும்ப பெறாது என்றாலும், நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் அவற்றை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ தனிநபர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 1000 நோட்டை அறிமுகம் செய்ய உள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களை இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது. சமூக ஊடகங்களின் ஊகங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், 1000 ரூபாயை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. புதிய 1000 ரூபாய் நோட்டுக்கான நோக்கங்கள் இல்லை.

போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக போதுமான அளவு 500 ரூபாய் நோட்டுகள் உற்பத்தியை உயர்த்தி சாத்தியமான பண கிடைப்பு பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டது. இது தவிர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எழுச்சியானது, பணத்திற்கான தேவை குறைவதற்கும் பங்களித்துள்ளது. ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+