மக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை கொடுத்தாலும், ரீடைல் சந்தையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என ரீடைல் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மே 23 முதல் வங்கிகளில் எவ்விதமான விண்ணப்பம், அடையாள அட்டை இல்லாமல் 2000 ரூபாயை மாற்றி கொடுப்பது என எஸ்பிஐ அறிவித்துள்ளதை தொடர்ந்து பிற வங்கிகளும் இதை கடைபிடிக்க உள்ளது. ஆர்பிஐ மீண்டும் 1000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யுமா என்ற முக்கியமான கேள்விக்கும் குழப்பத்திற்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை தொடர்ந்து இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் வேளையில் மீண்டும் பழைய படி 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இது முற்றிலும் 'ஊக' அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள், ரிசரவ் வங்கிக்கு 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இப்போது ஏதுமில்லை என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
2016ல் இந்தியாவில் வேகமாக நாணய புழக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட போது ஒரே இரவில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி மாயமானது.

இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. சந்தையில் போதுமான பிற ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் 2018-19 ஆம் ஆண்டிலேயே 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டோம்.
மேலும் மக்கள் யாரும் 2000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கிகளுக்கு நாளைக்கே படையெடுக்க வேண்டாம், செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் அவரகாசம் உள்ளது. 4 மாதம் அவகாசம் கொடுத்ததே மக்களுக்கு போதுமான நேரம் கொடுத்து எவ்விதமான பதற்றமான நிலைக்கு தள்ள கூடாது என்பதற்காக தான். மேலும் 2000 ரூபாய் திரும்ப பெறுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிக மிக சிறியது என்றும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications