இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குவது என்பது மிக எளிதான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆதார் மற்றும் பான் எண் இருந்தால் மட்டுமே போதுமானது.
நிமிடங்களில் ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பித்து கடன் பெற முடியும். அந்தளவுக்கு கடன் சேவை நிறுவனங்கள் பல ஆப்களை கொண்டுள்ளன.
அந்த வகையில் தனி ஆப் அல்லது இந்தியாபுல்ஸ் நிறுவனங்களை பற்றியும் கேள்வி பட்டிருப்போம்.
பான் எண் தவறாக பயன்பாடு
மீடியா துறை சார்ந்த ஆதித்யா கல்ரா, தனது பெயர் மற்றும் பான் எண்களை பயன்படுத்தி, தன்னுடைய அனுமதியின்றி, யாரோ ஒருவருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த அவரது பதிவில் சமீபத்தில் எனது கிரெடிட் அறிக்கையை பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
வேறு ஒருவருக்கு கடன்
என்னுடைய பான் எண் மற்றும் முகவரியினை பயன்படுத்தி இந்தியாபுல்ஸ் ஆப்பில், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள சில பயனர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த ஆவணமும் இல்லை. எப்படி எனது பான் எண் மூலம் பிறருக்கு பணம் செலுத்த முடியும். இது எப்படி நடந்தது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்கீரின் ஷாட்
அதுமட்டும் அல்ல சிபில் அறிக்கையில் இருந்து கடன் பற்றிய தகவலின் ஸ்கீரின் ஷாட்டையும் கல்ரா பகிர்ந்துள்ளார். ஆவணங்களின் படி வழங்கப்பட்ட தொகை 1,000 ரூபாய். அது நவம்பர் 14, 2021 நிலவரப்படி கொடுக்கப்பட்டுள்ளது. கடனை பெற்றவர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. நிலுவையில் உள்ள தொகை 9945 ரூபாய். இதே ஓவர் டியூ தொகை 5126 ரூபாய் தொகை என உள்ளது.
கவனமாக இருங்கள்
உண்மையில் எளிதில் விரைவில் கடன் கிடைக்கிறது என, பிரச்சனை தெரியாமல் கடன் வாங்கி விட்டு அவதிப்படுபவர்கள் ஏராளம். கல்ரா போன்றோரின் பிரச்சனையும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஆக இனியேனும் கடன் வாங்கும் முன்பு அலசி ஆராய்ந்து சரியான நிறுவனத்தில் வாங்க வேண்டும். அதோடு கல்ராவின் பிரச்சனைகளை போன்று வராமல் தடுக்க அவ்வப்போது கிரெடிட் ரிப்போர்டினை வாங்கி சரி பார்த்துக் கொள்வதும் நல்லது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications