புதிய வாகனம் வாங்க விரும்பும் மக்களுக்கு மத்திய அரசின் பழைய வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்திற்கு பெரும் உந்துதல் அளிக்கும் வகையில், 21 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கார் வாங்குபவர்களுக்கு சலுகைகளை அள்ளி வீசியுள்ளன.
இந்த சலுகையின் கீழ், பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்த பிறகு புதிய வாகனத்தை வாங்கும்போது, வாகனத்தின் விலையில் அல்லது சாலை வரியில் 25% வரை சலுகை வழங்கப்படும். வணிக வாகனங்களுக்கு 15% சலுகை அளிக்கப்படுகிறது.

பீகார், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சலுகைகளை அறிவித்துள்ளன. பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை ஸ்கிராப் செய்வதை மாநில அரசு மக்களிடம் ஊக்குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சுமார் 70,000 பழைய வாகனங்கள் தானாக முன்வந்து ஸ்கிராப் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வாகனங்களில் பல மத்திய அல்லது மாநில அரசு துறைகளுக்கு சொந்தமானவை. டெல்லி மட்டுமே 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களையும் ஆட்டோமேட்டிக் ஆக ஸ்கிராப் செய்ய வேண்டிய விதியுள்ள யூனியன் பிரதேசமாகும்.
பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்த பிறகு வணிக அல்லது போக்குவரத்து வாகனங்களை பதிவு செய்யும்போது 15% சாலை வரி சலுகையை 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அறிவித்துள்ளன.
பர்சனல் வாகனங்களைப் பொறுத்தவரை, 12 மாநிலங்கள் சாலை வரியில் 25% தள்ளுபடி வழங்குகின்றன. ஹரியானா 10% தள்ளுபடி அல்லது ஸ்கிராப் மதிப்பில் 50%ல் எது குறைவோ அதை வழங்குகிறது. அதே நேரத்தில் உத்தரகண்ட் 25% தள்ளுபடி அல்லது ரூ.50,000ல் எது குறைவோ அதை வழங்குகிறது.
கர்நாடகா புதிய வாகனத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு சாலை வரியில் நிலையான தள்ளுபடியை வழங்குகிறது - எடுத்துக்காட்டாக, ரூ.20 லட்சத்திற்கு மேல் விலையுள்ள வாகனங்களுக்கு ரூ.50,000 தள்ளுபடி வழங்குகிறது. புதுச்சேரி 25% தள்ளுபடி அல்லது ரூ.11,000ல் எது குறைவோ அதை வழங்குகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications