2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சி சார்பாக மீண்டும் ஜோ பைடன் போட்டியிடும் வேளையில், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப் உட்பட சில இந்திய அமெரிக்கர்களும் போட்டிப்போட உள்ள நிலையில், குடியரசு கட்சி அதன் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இதுவரையில் அறிவிக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க மறுபுறம் இதுவரையில் எந்த ஒரு நாடும் எதிர்கொள்ளாத பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், அமெரிக்க அரசியலில் போலி தகவல்களை AI தொழில்நுட்பம் மூலம் அனைத்து தரப்பினரும் நம்பும் வகையில் சமுக வலைத்தளத்தில் அள்ளி வீசப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணம் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக வெளியான புகைப்படம் பலராலும் நம்பப்பட்டது, சில மணிநேரத்திற்கு பின்பு தான் இது பொய்யான போட்டோ என்ற மக்களுக்கு தெரியவந்தது.

இதுப்போன்று போட்டோ, வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட் என அனைத்து வகையில் AI தொழில்நுட்பம் மூலம் போலியாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகள் ஒருவரின் வளர்ச்சியை, புகழை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும். இதேபோல் ஒரு அரசியல் தலைவர் தான் செய்யும் குற்றம், தவறுகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்ற முடியும்.
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் தான் முதன்முதலில் AI தொழில்நுட்பத்தின் எழுச்சிக்கு பின்பு நடக்க இருக்கும் மிகப்பெரிய தேர்தலாக இருக்கும். AI மூலம் என்ன பிரச்சனை என்பதை ஒரு வரியில் விளக்க வேண்டுமெனில் உண்மைக்கும் பொய்யான தகவலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது என்பது தான்.

இதனால் அமெரிக்கா 2024 தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது பெரிய கேள்விக்குறி தான். இதனால் மீண்டும் மக்கள் பிரின்ட் மீடியா பக்கம் திரும்புவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 2024 ஆம் ஆண்டு இந்தியாவிலும் பொது தேர்தல் நடக்கும் நிலையில் அமெரிக்க தேர்தல் முன்னோட்டமாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications