செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அனைத்து துறைகளும் முனைப்பு காட்டி வரும் வேளையில், பல துறையில் வேலைவாய்ப்புகள் குறையும் அச்சம் உள்ளது. இந்த வேளையில் வங்கித்துறையில் பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வங்கித் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளதாக புளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய வங்கி துறையில் சுமார் 2 லட்சம் பேரை தங்களுடைய வேலையை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் 2 லட்சம் வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவு என நினைக்கலாம், ஆனால் இந்திய சந்தையில் இருக்கும் அனைத்து வங்கிகளும் செலவுகளை குறைப்பதில் தீவிரம் காட்டும் வேளையில் அதிகளவில் ஏஐ சேவைகளை பயன்படுத்த முனைப்பு காட்டும். இதேவேளையில் இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ துறையில் பெரும் படையை திரட்டி வரும் வேளையில் இந்திய வங்கித்துறையில் ஏஐ தாக்கம் தாமதமாக வந்தாலும் பெரிய அளவில் வரலாம்.
புளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் கணிப்பு என்பது வங்கித்துறையை சேர்ந்த தலைமை தகவல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் கருத்துக்கணிப்பை அடிப்படையாகக் கொண்டது. இதன் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித ஊழியர்களால் முன்னர் செய்யப்பட்ட பணிகளை ஆட்டோமேட் செய்யப்படுவதால் சராசரியாக 3% பணியாளர்களை குறைக்க திட்டமிடுவதாக புளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் அறிக்கை கூறியுள்ளது.
இந்த அறிக்கையை உருவாக்கிய மூத்த அதிகாரியான Tomasz Noetzel கூறுகையில், பேக் ஆபீஸ் நடவடிக்கைகள், மிடில் ஆபீஸ் செயல்பாடுகள் மற்றும் வங்கியின் அடிப்படை செயல்பாடுகளில் உள்ள பணிகள் அனைத்தும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். (ஏடிம் வந்த பின்பு கேஷியருக்கு வேலை குறைந்தது போல்).
இதேபோல் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவைத் துறைகளும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் ஏஐ-சாட்பாட் வாடிக்கையாளர்களை தானாக தொடர்பு கொண்டு சேவை அளிப்பதில் அதிக பங்கை வகிக்கும் போது இப்பரிவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை வரும்.
மேலும், வாடிக்கையாளர்களின் அடையாளங்களை சரிபார்ப்பதில் ஈடுபடும் "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" (KYC) நடைமுறைகள், செயற்கை நுண்ணறிவு ஆட்டோமேட் செய்யப்படுவது மூலம் எளிமையாக்கி மனித ஊழியர்களின் தலையீடு இல்லாமல் செயல்படுத்தப்படலாம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதேவேளையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வங்கித்துறையில் வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக அழிக்காது, மாறாக வங்கித் துறையில் வேலையின் தன்மையை மாற்றும் என்று Tomasz Noetzel தெரிவித்துள்ளார்.
வேலை இழப்பு அதிகமாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வங்கித் துறைக்கு ஒரு ஜாக்பாட் என்ற சொல்ல வேண்டும். ஏஐ மூலம் 200000 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டால் ஊதிய செலவுகள் மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள், வங்கிகள் வரிக்கு முந்தைய லாபத்தில் 12% முதல் 17% வரை அதிகரிப்பை காணலாம், இதை உலகளாவிய அளவில் பார்க்கும் போது 180 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தொகையை சேமிக்க முடியும்.
புளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் கணிப்பில் பங்கேற்று பதிலளித்தவர்கள் (80%) அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் உற்பத்தித்திறன் மற்றும் வருவாய் அளவீட்டை குறைந்தபட்சம் 5% அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு உதவும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.
சிட்டி குரூப், தனி அறிக்கையில், செயற்கை நுண்ணறிவு மற்ற தொழில்களை விட வங்கித் துறையில் அதிகமான வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்று கணித்துள்ளது. வங்கி வேலைகளில் சுமார் 54% பணிகளை ஆட்டோமேட் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை சிட்டி குரூப் தனது அறிக்கையிலும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications