டெல்லி யூனியன் பிரதேசத்தில் 2017 முதல் 2021ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மதுபான ஒழுங்குமுறை கொள்கையில் நடந்த முறைகேடுகள் நடந்துள்ளது. முறையற்ற உரிமம், சில்லரை விற்பனையாளர் நியமனங்கள் மற்றும் மேற்பார்வை இல்லாமை போன்றவற்றால் டெல்லி கருவூலத்திற்கு ரூ.2,027 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை வெளிப்படுத்தியது.
இந்த ஊழல் வழக்கில், அப்போது கலால் துறை பொறுப்பாளராக இருந்த மணிஷ் சிசோடியா, அப்போது முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஊழலை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், டெல்லி கலால் கொள்கை ஊழலால், ஆம் ஆத்மி அரசாங்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை துறந்தார், புதிய முதல்வராக ஆம் ஆத்மியின் அதிஷி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆம் ஆத்மி 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.
குறிப்பாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மணிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் அடங்குவர். மதுபான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்த மூவரையும் மக்கள் ஆதரிப்பார்களா என்று சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேசமயம், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 27 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக, மணிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைகள் தங்களது தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதற்கு டெல்லி மதுபான ஊழல் வழக்கே காரணம் என கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications