21 வயதில் சினிமா வாய்ப்பு.. அதுவும் இயக்குநர் மணி ரத்தினத்தின் படத்தில் உடன் நடிப்பவர்கள் அப்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினிகாந்த் , மம்முட்டி. இப்படி ஒரு வாய்ப்பு தான் நடிகர் அரவிந்த்சாமிக்கு கிடைத்தது. அடுத்தடுத்து படங்கள் நடித்து பெண்களின் கனவு நாயகனாக மாறினார். ஆனால் அந்த ஒரு விபத்து அரவிந்த்சாமியின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆனால் அந்த விபத்தில் இருந்து மீண்டெழுந்த அவர் 3,300 கோடி மதிப்புள்ள தொழிலை கட்டி எழுப்பியுள்ளார்.
1991ஆம் ஆண்டு தளபதி திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த், மம்முட்டி ஆகியோர் கூட்டணியில் வெளியான இந்த படத்தில் தான் இளம்பெண்களின் கனவு நாயகனாக கலெக்டர் வேடத்தில் நடித்தார் அரவிந்த்சாமி. தமிழ் திரையுலகில் மணிரத்தினம் படத்தில் அதுவும் ரஜினி மற்றும் மம்முட்டி உடன் நடிக்கும் வாய்ப்பு அறிமுக படத்திலேயே கிடைத்துவிட்டது. ஆனால் அது முழுக்க முழுக்க அவரது திறமைக்கு தான் கிடைத்தது.

தளபதி படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மணிரத்தினம் அவர்களே அரவிந்த்சாமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். அப்படி தான் ரோஜா படம் எடுக்கப்பட்டது. அதுவும் செம ஹிட்டாகி அரவிந்த்சாமிக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. அடுத்ததாக மணிரத்தினத்தின் பாம்பே படம். அதுவும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டாகி முன்னணி கதாநாயகனாக இவரை மாற்றியது.
ஆனால் 2005ஆம் ஆண்டு திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதில் படுத்த படுக்கையானார். இது அவரின் சினிமா கனவையும் சிதைத்தது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உண்டானது. ஆனால் அரவிந்த்சாமி தன்னம்பிக்கையோடு தொழில்துறையில் கால்பதிக்க தொடங்கினார்.
லயோலா கல்லூரியில் காமர்ஸ் பிரிவிலும், வட கரோலினாவின் வேக் ஃபாரஸ்டில் தொழில் மேலாண்மை படிப்பையும் முடித்தவர் என்பதால் அவர் முதலில் ஸ்டீல் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டார். பின்னர் தான் சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.
ரெடிஃப் தளம் அரவிந்த் சாமி முதலில் ProLease India என்ற பேரோல் நிறுவனத்தின் வேலை செய்ததாகவும் பின்னர் Talent Maximus என்ற நிறுவனத்தை தொடங்கியதாகவ்பும் குறிப்பிடுகிறது. 2022ஆம் ஆண்டில் Talent Maximus நிறுவனத்தின் மதிப்பு 3300 கோடி ரூபாய் ஆகும்.
விபத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து தொழிலை மேம்படுத்திய அரவிந்த்சாமி பீனிக்ஸ் பறவையாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார். ஜெயம் ரவியுடன் வில்லனாக நடித்த தனிஒருவன் படம் அரவிந்த் சாமிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
அண்மையில் கூட மெய்யழகன் படத்தில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது தன்னுடைய வாழ்க்கை குறித்து இவர் அளித்த பேட்டிகள் சமூகவலைதளங்களில் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பகிரப்பட்டன.
விபத்தில் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் சமயத்தில் உடல் எடை கூடி, முடி கொட்டி அரவிந்த்சாமியா இது என கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர் சில ஆண்டுகளிலேயே தன்னுடைய தோற்றத்தை மாற்றி மீண்டும் திரையுலகில் கனவு நாயகனாக வலம் வருகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

விஜய் என்னை உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக.. மனைவி சங்கீதா-வின் முக்கிய குற்றச்சாட்டு இதுதான்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications