அமெரிக்கா: சர்வதேச அளவில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) எனப்படும் தொழில்நுட்பம் மனிதர்களின் பெரும்பாலான வேலைகளை மிச்சப்படுத்தி வருகிறது.
இது ஒரு வசதியாக தோன்றினாலும்,ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் மனிதர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், வருங்காலத்தில் எல்லா வேலைகளையும் ஏஐ அழித்து விடும் என கூறியுள்ளார்.

பாரீஸில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய எலன் மஸ்க், முன்பை விட ஏஐ தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ச்சி அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில் நுட்பத்தால் அனைத்து வேலைகளும் அழிந்துவிடும் என குறிப்பிட்ட எலன் மஸ்க், "ஒரு கட்டத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது, ஏனெனில் நம் வேலைகள் அனைத்தையும் தொழில்நுட்பமே செய்து விடும்.
ஆனால் இது ஒரு மோசமான மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். ஏனெனில் வேலை என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிடும்" என கூறியுள்ளார்.
ரோபோக்களே அனைத்து வேலைகளையும் சேவைகளையும் செய்து விடும் என கூறிய எலன் மஸ்க், எதிர்காலத்தில் வேலை இல்லாமல் மனிதர்கள் உணர்வுப்பூர்வமாக எவ்வாறு தன்னிறைவு பெறுவார்கள் என்ற கேள்வியையும் முன் வைத்தார்.
கணினியும் ரோபோக்களும் நம்மை விட வேலைகளை சிறப்பாக செய்யும் என்றால் நம்முடைய பங்கு என்னவாக இருக்கும்? என வினவிய எலன் மஸ்க், ஏஐ செய்யும் வேலைகளில் மனிதர்களின் பங்களிப்பு இருக்கும் ஏனெனில் ஏஐ-க்கு அர்த்தம் கொடுப்பவர்களாக மனிதர்கள் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலை சாத்தியப்பட சர்வதேச உச்சபட்ச வருவாய் என்ற சூழல் உருவாக வேண்டும், இதனை சர்வதேச குறைந்தபட்ச வருவாயுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது என்றும் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இது குறித்து அவர் விரிவாக பேசவில்லை.
அதேபோல குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்ற அறிவுரையையும் எலன் மஸ்க் வழங்கியுள்ளார்.
சமூக ஊடகங்கள் dopamine-maximizing AI புரோகிராம் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் குழந்தைகள் அவற்றை பயன்படுத்தும் நேரத்தை பெற்றோர் கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என எலன் மஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு நிகராக வேலைகளை செய்து வருவதால் பல்வேறு துறைகளும் தானியங்கி முறைகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. இதனால் சர்வதேச அளவில் மனிதர்களின் வேலைவாய்ப்பு படிப்படியாக பறி போகும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications