லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளைய தினம் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. கூலி திரைப்படத்தை பொருத்தவரை பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
நாளை திரைக்கு வரும் கூலி: கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், வில்லன் கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் வருகிறார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்த திரைப்படத்தில் நடித்த ஒரு உச்சபட்ச நடிகர் எனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

சம்பளத்தை உயர்த்தினாரா ரஜினி: ரஜினிகாந்திற்கு இந்த திரைப்படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் சம்பளமாக வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டதாம், ஆனால் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து அட்வான்ஸ் புக்கிங் பல மடங்கு உயர்ந்ததால் அவருடைய சம்பளத்தை 200 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள் என டெக்கன் ஹெரால்டு செய்தி கூறுகிறது. இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் .இந்த படத்தில் அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.

நடிகர்கள் சம்பளம்: அடுத்ததாக நடிகர் சத்யராஜ் மற்றும் கனடா நடிகர் உபேந்திரா ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் தலா ஐந்து கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கின்றனர். கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடித்ததற்காக 4 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறார்.

சம்பளம் வேண்டாம் என மறுப்பு: கூலி படத்தில் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தை வருகிறார். இதற்காக அவருக்கு 20 கோடி ரூபாயை சம்பளம் வழங்குவதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராக இருந்தது. ஆனால் அமீர்கான் எனக்கு இந்த படத்திற்கு எந்த ஒரு சம்பளமும் வேண்டாம் என கூறிவிட்டாராம் . நடிகர் ரஜினிகாந்தின் மீது இருக்கும் மரியாதை மற்றும் அவர் மீதான அன்பு காரணமாகவே தான் இந்த படத்தில் தோன்ற ஒப்புக்கொண்டதாகவும் இதற்கு எனக்கு சம்பளம் வேண்டாம் எனவும் அவர் மறுத்துவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது.
இயக்குநர் சம்பளம்: படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் 50 கோடி ரூபாயை இந்த படத்திற்கான சம்பளமாக பெற்றிருக்கிறார் . இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்திற்கு 15 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறாராம். பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்காக 3 கோடி ரூபாயை பெற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications