கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக பல்வேறு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை கடைப்பிடித்தனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டதால் வீட்டு வாடகை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவை பொருத்தவரை தற்போது பல முக்கிய ஐடி நிறுவனங்கள் மீண்டும் நிறுவனங்களில் வந்து வேலை செய்யும் முறையை கடைபிடித்து வருகின்றன. இதனால் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை முடித்துவிட்டு அலுவலத்திற்கு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் ஐடி ஊழியர்கள்
அந்த வகையில் இந்தியாவில் ஐடி துறையின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஐதராபாத் நகரத்தில் தற்போது 90 சதவீத ஊழியர்கள் அலுவலத்திற்கு செல்ல தொடங்கி விட்டதை அடுத்து வீட்டு வாடகையை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வொர்க் ப்ரம் ஹோம் முறை முடிவுக்கு வந்து மீண்டும் அலுவலகம் செல்லும் முறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது வீட்டின் வாடகை விலையை உயர்த்தி உள்ளதாகவும் வீட்டு உரிமையாளர்கள் 5% முதல் 10% வரை வாடகையை உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரியல் எஸ்டேட் துறை
தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்கள் அலுவலகத்திற்கு அருகிலேயே தங்க வேண்டும் என்று விரும்புவதால் பெரும்பாலான ரியல் எஸ்டேட் துறையினர்களின் விற்பனை ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டு உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்
முக்கியமாக ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி, கோண்டாப்பூர், மியாபூர், எல்.பி.நகர், அதிபட்லா ஆகிய பகுதிகளில் வாடகை அதிகரித்துள்ளதாகவும் இதனால் வீட்டு உரிமையாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
5-10% உயர்வு
வீட்டு உரிமையாளர்கள் கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை விட தற்போது 5 முதல் 10 சதவீதம் வரை வாடகையை உயர்த்தியுள்ளதாகவும் அதேபோல் அட்வான்ஸ் தொகையையும் உயர்த்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனாரோக் அறிக்கை
தென்னிந்தியாவின் முக்கிய ஐடி நகரங்களான ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் தற்போது வீடுகளின் தேவை அதிகரித்துள்ளதால் வீட்டின் விலை மற்றும் வாடகை உயர்ந்துள்ளது என அனாரோக் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications