உலகில் பல ஆயிரக்கணக்கான எரிமலைகள் இருக்கின்றன. இவற்றில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகள், உறங்கும் எரிமலைகள் , செயலற்ற எரிமலைகள் என வகைப்பாடு உள்ளது. செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் அவ்வப்போது வெடித்து சிதறி நெருப்பை வெளியிடும். சில எரிமலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்து திடீரென வெடித்து பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் திடீரென எரிமலை ஒன்று வெடித்துள்ளது.
எத்தியோப்பியாவில் உள்ள ஹயலி குப்பி என்ற எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்து சிதறி இருக்கிறது. இந்த எரிமலை வெடிப்பு எத்தியோப்பியா மட்டுமில்லாமல் இந்தியாவுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சாம்பல் மேகங்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு வேகமாக பரவி வருகின்றன. எத்தியோப்பியாவில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் இந்த சாம்பல் மேகங்கள் பயணம் செய்கின்றன.

எரிமலை வெடிப்பின் போது சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பரவி தற்போது இந்தியாவின் நோக்கி வர தொடங்கி இருக்கிறது .இந்தியாவில் டெல்லி ,ஹரியானா ,உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை நோக்கி இந்த எரிமலை சாம்பல் வருவதாக சொல்லப்படுகிறது. முதலில் குஜராத்தினுள் நுழைந்து பின்னர் ராஜஸ்தான் ,டெல்லி ,வடமேற்கு மகாராஷ்டிரா ,ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இரவு 10 மணிக்குள் இந்த எரிமலை சாம்பல்கள் வந்து அடையும் என ஸ்கைமெட் நிறுவனம் கூறுகிறது.

பின்னர் இமயமலை மற்றும் பிற பகுதிகளுக்கும் செல்லும் என ஸ்கைமெட் அறிக்கை தெரிவிக்கிறது. எரிமலையால் ஏற்பட்ட இந்த சாம்பல் மேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வட இந்தியாவில் நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது . இதனால் விமானங்கள் இயக்கப்படுவதிலும் சிக்கல் ஏற்படும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு பிரச்சினை இருக்கும் நிலையில் இந்த எரிமலை சாம்பலும் டெல்லியை நோக்கி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எரிமலை சாம்பல் வளிமண்டலத்திற்கு மேல் பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கும் என்பதால் தீவிரமான பிரச்சினைகள் மக்களுக்கு இருக்காது என சொல்லப்படுகிறது.
சாம்பல் மேகம் வரும் போது வழக்கத்தை விட இருள் சூழந்து காணப்படும் என கூறப்படுகிறது. இந்த சாம்பல்களால் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகாசா ஏர், கேஎல்எம் ராயல் ஏர்லைன்ஸ், இண்டிகோ போன்ற விமானங்கள் தங்களுடைய சில விமான சேவைகளை ரத்து செய்து இருக்கின்றன . விமான போக்குவரத்து இயக்குனராகமும் விமான நிறுவனங்கள் சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது. அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றி அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது .
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications