இந்தியா ஆட்டோமொபைல் துறையில் நடந்து கொண்டு இருக்கும் அவலத்தைப் பார்த்து வருத்தப்படாத ஆட்கள் மிகக் குறைவு தான். இதில் ஒரு தொழில் அதிபர் தற்கொலை வேறும் கண் முன் வந்து போகிறது. அந்த அளவுக்கு தொடர் விற்பனை வீழ்ச்சி.
அதிலும் குறிப்பாக வணிக வாகனங்களைத் தயாரிக்கும் அசோக் லேலண்டுக்குச் சொல்லவே வேண்டாம். கடந்த நவம்பர் 2019-ல் கூட சுமார் 26 சதவிகித (உள் நாட்டு விற்பனை + ஏற்றுமதி) விற்பனையில் வீழ்ச்சி கண்டது அசோக் லேலண்ட்.
இப்போது இந்த விற்பனை வீழ்ச்சி பிரச்னைகளை எல்லாம் கடந்து, ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் சேர்த்து ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறது.
வேலை இல்லை
அது தான் வேலை இல்லா நாட்கள். அசோக் லேலண்ட் ஏற்கனவே கூடுதலாக உற்பத்தி செய்து வைத்திருக்கும் வாகனங்களை எல்லாம் விற்றுத் தீர்த்துக் கொள்வதற்கும், சந்தையில் வாகன தேவையைப் பொறுத்து தன் உற்பத்தியை சரி செய்து கொள்வதற்கும் வேலை இல்லா நாட்களை அறிவித்து இருக்கிறார்கள்.
எத்தனை நாள்
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பல்வேறு உற்பத்தி ஆலைகளில், டிசம்பர் 2019-ல் இரண்டு நாள் முதல் பன்னிரண்டு நாள் வரை வேலை இல்லா நாட்களாக அறிவித்து இருக்கிறார்களாம். இந்த விவரங்களை அசோக் லேலண்ட் நிறுவனம், அரசு அமைப்புகளிடம் சமர்பிக்கும் சில ஃபைலிங்களில் அறிவித்து இருக்கிறது.
கடந்த காலம்
இந்திய ஆட்டோமொபைல் துறையின், கடந்த மோசமான மாதங்களில் மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோ கார்ப் லிமிடெட், டிவிஎஸ் மோட்டார்ஸ், சுந்தரம், க்ளேடன் என பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும், பொருளாதார மந்த நிலையை தாங்க முடியாமல் வேலை இல்லா நாட்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அசோக் லேலண்ட் தகவல்
அசோக் லேலண்ட் தன் வலை தளத்தில் கொடுத்து இருக்கும் விவரங்கள் படி
--மீடியம் மற்றும் ஹெவி கமர்ஷியல் ட்ரக்குகள் விற்பனை 54 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.
--மீடியம் மற்றும் ஹெவி கமர்ஷியல் ட்ரக்குகள் விற்பனை 196 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
--லைட் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை 25 சதவிகிதம் சரிவைக் கண்டு இருக்கிறது.
எதிர் கொள்ள வேண்டும்
இப்படி சகட்டு மேனிக்கு உள் விற்பனையில் சரிவைக் கண்டால், உற்பத்தியை குறைக்கத் தானே செய்வார்கள். பொருத்திருந்து பார்ப்போம், எப்படியாவது இந்திய ஆட்டோமொபைல் துறை, இந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டும் வந்தால் பரவாயில்லை. அதுவரை இன்னும் இப்படி எத்தனை வேலை இல்லா நாட்களை எதிர் கொள்ள வேண்டுமோ தெரியவில்லை.
பங்கு விலை
கடந்த நவம்பர் 28, 2019 அன்று 81.45 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த அசோக் லேலண்ட் பங்குகள், இன்று 77 ரூபாய் 40 பைசாவுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. தொடர்ந்து விற்பனை சரிவு போன்ற செய்திகளால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 3 மாதங்களில் பெரிய ஏற்ற இறக்கங்களைக் காணாமலேயே தேங்கிக் கிடக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications