இந்தியப் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக மட்டுமே இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. இது இந்தியா போட்டிப்போடும் சக பொருளாதார வளர்ச்சி நாடுகளை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதே ஆசிய வளர்ச்சி வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022ஆம் நிதியாண்டில் 11 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாகவும் தனது வளர்ச்சி கணிப்பு அளவீட்டைக் குறைத்துள்ளது.
2021 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 1.6 சதவீதம் வரையில் உயர்ந்திருந்தாலும், மொத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -7.3 சதவீதமாகக் குறைத்தது.
இதைத் தொடர்ந்து ஜூன் காலாண்டில் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சத்தை அடைந்து ஒரு நாளுக்கு அதிகப்படியாக ஒரு நாளில் 4 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்றும், ஜூலை மாதத்தில் தற்போது 40000 ஆகக் குறைந்துள்ளது.
2வது அலை கொரோனா அலையைக் கட்டுப்படுத்த பல மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் அமலாக்கம் செய்தது இதனால் நாட்டின் வர்த்தகம் அதிகம் பாதித்தது. இதனால் 2022ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதேபோல் 2022ஆம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.5 சதவீதம் வரையில் உயரும் என்று கணித்துள்ளது.