மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில் அசாம் இறுதியாக ரேஷன் கார்டு போர்ட்டபிளிட்டி சேவையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று உணவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இத்திட்டம் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மலிவான விலையில் கிடைக்கும் மளிகை பொருட்களை ரேஷன் கடைகளில் இருந்து எவ்விதமான பிரச்சனையுமின்றிப் பெற முடியும்.
ONORC திட்டம்
ONORC (One Nation, One Ration Card) இன் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA) இன் கீழ் உள்ள பயனாளிகள், மானிய விலையுள்ள உணவு தானியங்களின் ஒதுக்கீட்டை எந்த மின்னணு விற்பனைப் புள்ளியில் இருந்தும் (ePoS) தாங்கள் விரும்பும் நியாய விலைக் கடைகளில் இருந்தும் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கொண்ட ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்திப் பெறலாம் என மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
36வது மாநிலம்
ONORC திட்டத்தை அமல்படுத்தும் 36வது மாநிலம்/ யூனியன் பிரதேசமாக அசாம் விளங்குகிறது என மத்திய உணவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதன் மூலம், ONORC திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பை எடுத்துச் செல்லக்கூடியதாக மாற்றுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 காலம்
மத்திய உணவு அமைச்சகத்தின் தரவுகள் படி கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்பு ஆதிகமாக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் NFSA பயனாளிகளுக்கு, குறிப்பாகப் புலம்பெயர்ந்த பயனாளிகளுக்கு, மானிய விலையில் உணவு தானியங்களை உறுதி செய்வதில் ரேஷன் கார்டு போர்ட்டபிளிட்டி கணிசமாகப் பங்களித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
71 கோடி பரிவர்த்தனை
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஆகஸ்ட் 2019 இல் தொடங்கப்பட்டது. 2019 முதல், சுமார் 71 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன, இதன் மூலம் சுமார் 40000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் மானியத்தில் கொடுக்கப்பட்டு மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
மக்கள் பலன்
தற்போது ஒவ்வொரு மாதமும் 3 கோடிக்கும் அதிகமான பரிமாற்றங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் வாயிலாக அளிக்கப்படுகிறது. NFSA மற்றும் PMGKAY திட்டத்தின் கீழ் மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள் என மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications