இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரச் சமநிலையை நிலை நிறுத்துவது மிகவும் முக்கியமானது, அதேவேளையில் அவசியமானதும் கூட.
யாராக இருந்தாலும், எவ்வளவு தொகையை முதலீடு செய்வதாக இருந்தாலும் திட்டத்தின் ஒவ்வொரு நன்மை தீமை பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வப்போது முதலீட்டு திட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.
அந்த வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தை பாருங்க.
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விதிகள் மாறவுள்ளன. அடல் பென்ஷன் யோஜனாவின் புதிய விதிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.புதிய மாற்றத்தின் படி வருமான வரி செலுத்துவோர் அக்டோபர் 1, 2022 முதல் திட்டத்தில் சேர முடியாது.இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
18-40 வயதுக்கு உட்பட்டவர்
தற்போதைய விதிகளின்படி, 18-40 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், நீங்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் புதிய விதி அமல்படுத்தப்பட்ட பிறகு வருமான வரி செலுத்துவோர் இத்திட்டத்தில் சேர முடியாது. அப்படியானால் பழைய சந்தாதாரருக்கு என்ன நடக்கும்?
புதிய விதி
நீங்கள் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்திருந்தால், புதிய விதி உங்களைப் பாதிக்காது. நீங்கள் ஏற்கனவே வரி செலுத்துபவராக இருந்தாலும் கூட. அக்டோபர் 1ம் தேதிக்கு முன் கணக்கு துவங்கியவர்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் தொடர்ந்து பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
PFRDA அமைப்பு
இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது. எந்த வங்கியிலும் அடல் பென்ஷன் யோஜனா கணக்கைத் திறக்கலாம், அதேபோல் உங்கள் பணம் அந்த வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் மூலம் கழிக்கப்படுகிறது.
அமைப்புசாரா துறை
அடல் பென்ஷன் யோஜனா (APY) அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000, 2,000, 3,000, 4,000 அல்லது 5,000 வரையில் உத்தரவாத உடன் அளிக்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications