இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான சந்தையில் முன்னணியில் இருக்கிறது ஏதர் எனர்ஜி நிறுவனம். இந்த நிறுவனத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஓசூர் மாவட்டத்தில் தன்னுடைய வாகன உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இங்கே உற்பத்தியாக கூடிய இருசக்கர வாகனங்கள் தான் நாடு முழுவதும் பயணம் செய்கின்றன.
ஓசூர் உற்பத்தி ஆலையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக ஏதர் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு தான் இந்நிறுவனம் ரிஸ்தா என்ற மின்சார ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ரிஸ்தா வாகனத்தை பொறுத்தவரை ஏதரின் பிராண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக கூடிய வாகனமாக மாறி இருக்கிறது.

ஓசூர் ஆலையில் இந்த வாகனங்களை உற்பத்தி செய்து வரக்கூடிய ஏதர் எனர்ஜி நிறுவனம் 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை ஓசூர் ஆலையில் நாங்கள் உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறோம் ஒரு சாதாரண புரோட்டோ டைப்பில் தொடங்கி தற்போது 5 லட்சம் என்ற ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை எட்டி ருக்கிறோம் என ஏதர் எனர்ஜி நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்வப்னில் ஜெயின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் வெறும் வாகனத்தை மட்டும் உற்பத்தி செய்யவில்லை மின்சார வாகனத்திற்கான ஒரு எக்கோ சிஸ்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். தரத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம் இதுதான் பெருமளவிலான வாடிக்கையாளர்கள் எங்கள் மீது நம்பிக்கையை வைக்க உதவுகிறது என கூறியுள்ளார். அறிமுகம் செய்யப்பட்ட ஓர் ஆண்டுகளுக்கு உள்ளாகவே ரிஸ்தா வாகனத்தை பொறுத்தவரை ஏதர் உற்பத்தி செய்யும் மூன்றில் ஒரு வாகனமாக தற்போது உருவாகி இருக்கிறது.

பெரும்பாலான குடும்ப வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரை தான் அதிக எண்ணிக்கையில் வாங்குவதாக ஏத்தர் நிறுவனம் தெரிவிக்கிறது. மூன்றாம் நிலை நகரங்களிலும் தற்போது தீவிரமாக தங்களை விரிவாக்கம் செய்து வருகிறது என தெரிவித்துள்ளது. ஏத்தரை பொறுத்தவரை ஓசூரில் இரண்டு உற்பத்தி ஆலைகளை செயல்படுத்தி வருகிறது.
ஒரு ஆலை முற்றிலும் இந்த மின்சார ஸ்கூட்டர்களை அசெம்பிள் செய்யக்கூடியது, மற்றொரு ஆலை பேட்டரி உற்பத்திக்கான மையமாக இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 4.2 லட்சம் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த இரண்டு ஆலைகளும் இருக்கின்றன.
ஏதரின் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையின் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஓசூரில் உருவாக்கப்பட்டிருக்கின்றன . ஓசூரில் உற்பத்தியாக கூடிய வாகனங்கள் நாடு முழுவதும் பயணம் செய்வது ஓசூர் மக்களுக்கும் பெருமிதம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. மற்றொரு போட்டி நிறுவனமான ஓலாவும் கூட ஓசூரில் தான் தன்னுடைய உற்பத்தி ஆலையை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications