தானே: என்ன தாத்தா பணம் எடுக்கனுமா? வாங்க நாங்க எடுத்து தர்றோம். என்று அன்பாக பேசிய இளைஞர்களை நம்பிய முதியவரிடம் இருந்து, 19,000 ரூபாய் அபேஸ் செய்தனர் இளைஞர்கள்.
இந்த மோசமான செயல் எங்கு நடந்தது என்று தானே கேட்கிறீர்கள். வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.
கவனத்தை திசை திருப்பி திருட்டு
ஏடிஎம் ஒன்றிற்கு பணம் எடுக்க சென்ற முதியவரின் கவனத்தை திசை திருப்பி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தினை திருடியதாக கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்றும் மஹாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள கோட்பந்தர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உதவி செய்வதாக ஏமாற்றிய இளைஞர்கள்
64 வயதான முதியவர் ஒருவர், தானே நகரில் உள்ள கோட்பந்தர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்வதாக இரு இளைஞர்கள் நடித்துள்ளனர். முதியவரோ அவர்கள் உதவி செய்வதாக நம்பி ஏமாந்துள்ளார். அவரின் கவனத்தை திசை திருப்பி, முதியவர் அசந்த நேரத்தில் முதியவரின் ஏடிஎம் கார்டையே மாற்றியுள்ளனர்.
ஏடிஎம் மூலம் கைவரிசை
பின் போலி ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பது போல நடித்து பணம் வரவில்லை என நம்ப வைத்துள்ளனர். பின்னர் முதியவரின் ஏடிஎம் கார்டை வைத்து உதவி செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இதனை அறிந்த முதியவர் காசர்வதாவலி போலிசில் பதிவு செய்துள்ளார்.
வேலையே இது தான்
போலீசார் விசாரணையின் போது தான் தெரிய வந்துள்ளது. அந்த கில்லாடிகள் இருவரும் இது போன்ற பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பதும், அவர்களுக்கு வேலையே மற்றவர்களை ஏமாற்றி சம்பாதிப்பது தான் என்று. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று போலீசார் கியாசுதீன் அபு சித்திக் 26, அப்துல் ரஹ்மான் ஆகா 24 ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
பல மோசடிகள் அம்பலம்
மும்ப்ராவில் இருந்த இந்த இருவரின் வீட்டில் இருந்தும் பல்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள், குறிப்பாக சொல்லவேண்டுமானால் 55 ஏடிஎம் கார்டுகள், விலை உயர்ந்த நான்கு மொபைல் போன்கள், 2,200 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதுதவிர இந்த இரு கில்லாடிகள் மீதும் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications