இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் இந்த நிலையில் மக்கள் எப்போதும் இல்லாமல் அதிகளவிலான பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுத்து வருகின்றனர். இதனால் பேமெண்ட் நிறுவனங்களும் வங்கிகளும் குழப்பத்தில் உள்ளது.
கொரோனா வந்த பின்பும் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைச் செய்யத் துவங்கியுள்ளனர் என ஆய்வு வெளிவரும் இதே வேளையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அதிகளவிலான பணத்தை எடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் இந்திய மக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அதிகளவில் எடுத்த பணத்தின் மூலம் நாட்டின் பணப் புழக்கத்தின் அளவு சுமார் 26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏடிஎம் பணம்
இந்திய மக்கள் ஆகஸ்ட் மாதத்தில் தங்களது டெபிட் கார்டு மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கும் பணத்தின் அளவு எப்போதும் இல்லாமல் அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு பரிமாற்றத்திற்கு எடுக்கப்பட்ட தொகையின் அளவு 4,959 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணப் புழக்கத்தின் அளவு சுமார் 26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த 26 லட்சம் கோடி ரூபாய் என்பது நாட்டின் 12 சதவீத ஜிடிபி.
ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்
2019 ஆண்டு நவம்பர் மாதம் ஏடிஎம் மூலம் செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்களின் சராசரி மதிப்பு 4,507 ரூபாயாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இது 4,959 ரூபாயாக உயர்ந்து 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதே காலகட்டத்தில் யுபிஐ பணப் பரிமாற்றத்தின் அளவு 1,549 ரூபாயில் இருந்து 1,850 ரூபாயாக உயர்ந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
லாக்டவுன்
கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் ஏடிஎம் பணப் பரிமாற்றங்கள் அதிகளவில் குறைந்தது. ஆனால் அதன் பின்பு ஏடிஎம் பரிமாற்றங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் துவங்கியுள்ள என ஏடிஎம் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
பணம் தான் கெத்து
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் யூபிஐ பரிமாற்றங்களின் எண்ணிக்கை புதிய உச்சங்களை அடைந்து வரும் இந்த நிலையிலும் மக்கள் அதிகளவில் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுத்து வருவது மக்கள் மத்தியில் பணத்தின் மீதான ஆதிக்கத்தைக் காட்டுகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications