இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலியான செய்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏடிஎம்கள் இயங்காது, பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு என போலியான தகவல்கள் பரவும் நிலையில் மக்கள் அவற்றை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் ஏடிஎம்கள் இயங்காது என ஒரு தகவல் வாட்ஸ் அப் செயலி வாயிலாக பரவி வருகிறது. இந்நிலையில் இது ஒரு போலியான செய்தி என பிஐபி தெரிவித்துள்ளது. தன்னுடைய எக்ஸ் பக்கம் வாயிலாக இந்த செய்தியை பகிர்ந்துள்ள பிஐபி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்தியாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படாது என ஒரு போலியான ஒரு செய்தி பரவி வருகிறது. இது உண்மை கிடையாது, இது முற்றிலும் போலியானது. நாடு முழுவதும் வழக்கம் போல ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இது போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வரக்கூடிய எந்த ஒரு செய்தியையும் அதன் நம்பகத்தன்மையை அறியாமல் யாரிடமும் பகிர வேண்டாம் என பிஐபி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அரசாங்கம் சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடக்கூடிய தகவல்களை மட்டுமே மக்கள் பகிர வேண்டும் என்று அவற்றை மட்டுமே நம்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தொடர்பாக பல்வேறு தவறான செய்திகளும் தகவல்களும் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் வாயிலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தான் சமூக வலைத்தளங்கள் வாயிலாக படிக்கும் செய்திகளை நம்பகமான ஆதாரத்திலிருந்து வந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்கி குவிப்பதாக தகவல் வெளியானது. பெட்ரோல் நிலையங்கள் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை போலவும் வீடியோக்கள் படங்கள் வெளியாகின. இந்த சூழலில் இந்துஸ்தான் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் போதுமான அளவு பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி எரிவாயுக்களின் கையிருப்பு இருக்கிறது எனவும் நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களும் எல்பிஜி நிலையங்களும் சீரான முறையில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளது.
மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஐஓசிஎல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நாடு முழுவதும் போதுமான அளவு எண்ணெய் எரிபொருள் கையிருப்பு இருக்கிறது மக்கள் அச்சமடைய வேண்டாம். நம்முடைய நிலையங்கள் அனைத்தும் சீரான முறையில் செயல்பட்டு வருகின்றன. பதற்றம் காரணமாக யாரும் இவற்றை வாங்கி வைக்க வேண்டிய தேவை இல்லை என கூறியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications