இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊதிய உயர்வு விகிதத்தை குறைத்திருக்கும் நிலையில் இளம் தொழில் நிபுணர்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என பங்குச்சந்தை நிபுணர் விவேக் சிங்கால் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் தங்களுடைய நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு கூட 4 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்தவர்களுக்கு கூட 2 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஊதிய உயர்வு வழங்குவதையே ஒரு காலாண்டுக்கு தள்ளி வைத்துள்ளது. இவ்வாறு பல்வேறு நிறுவனங்களும் ஊதிய உயர்வு வழங்கும் விகிதத்தை குறைத்து வரக்கூடிய நிலையில் மக்கள் செலவினங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என முதலீட்டு துறை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த நிபுணர்கள் அறிவுரை வழங்க தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் விவேக் சிங்கால் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு கூட மூன்று முதல் நான்கு சதவீதம் வரை தான் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என ஹெச்சிஎல் நிறுவன ஊதிய உயர்வு செய்தியை பகிர்ந்துள்ளார்.
இனியும் தாமதம் செய்யாதீர்கள், தேவையற்ற செலவினங்களை குறைத்து முதலீட்டை தொடங்குங்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறந்த முதலீடுகளை மேற்கொண்டு ஒரு கணிசமான நிதி தொகுப்பு கொண்ட போர்ட் போலியோவை உங்களுக்கென உருவாக்கிக் கொள்ளுங்கள். ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு ஊதியம் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.
அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது பணவீக்க விகிதம் அதிகரித்து வருகிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ற வகையில் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தராமல் இருக்கின்றன .
சில மாதங்களுக்கு முன்பு கூட இந்திய நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டினாலும் ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாக பெரிய அளவில் ஊதிய உயர்வை வழங்கவில்லை என ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தான் மக்கள் தேவையற்ற செலவுகளை குறைத்து எதிர்காலத்திற்காக இதுவரை சேமிக்க தொடங்கவில்லை என்றால் தற்போது இருந்து சேமிக்க தொடங்கி விட வேண்டும் என பலரும் கூறுகின்றனர். குறிப்பாக மருத்துவ செலவுகள், கல்வி செலவுகள் அதிகரிப்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
More From GoodReturns

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications