ஆகஸ்ட் 18.. டாடா குழுமத்திற்கு முக்கியமான நாள்.. என்.சந்திரசேரகன் எதிர்காலம் என்ன?

ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு டாடா குழுமத்தின் உயர்மட்ட குழுவில் பல நெருக்கடியான சூழ்நிலை உருவாகிக்கொண்டு இருக்கும் வேளையில், மிக முக்கியமானதாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக இருக்கும் என்.சந்திரசேகரன் மீண்டும் இப்பதவியில் நியமிக்க வேண்டுமா வேண்டாமா என்ற முக்கியமான கேள்விக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி முடிவு செய்யப்பட உள்ளது.

டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் (கிளை நிறுவனங்களையும் சேர்த்து) தாய் நிறுவனம். இந்த டாடா சன்ஸ் நிர்வாகத்தில் பெரும் அதிகாரம் கொண்டு இருப்பது டாடா டிரஸ்ட் அமைப்பும் அதன் தலைவருமான நோயல் டாடா. ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு டாடா டிர்ஸ்ட் அமைப்பின் அதிகாரம் மொத்தமாக நோயல் டாடா கைக்கு வந்துள்ளது.

ஆகஸ்ட் 18.. டாடா குழுமத்திற்கு முக்கியமான நாள்.. என்.சந்திரசேரகன் எதிர்காலம் என்ன?

இந்த நிலையில் டாடா குழுமத்தில் பல வர்த்தக பிரிவுகள் பெரும் நஷ்டத்தில் இயங்குவது, டாடா சன்ஸ் ஐபிஓ விவகாரம், டாடா சன்ஸ் நிறுவனத்தில் பலோன்ஜி குடும்பம் வைத்திருக்கும் பங்குகளை விற்பது தொடர்பான விவகாரங்கள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை நோயல் டாடா தற்போது என்.சந்திரசேகரனிடம் கேட்டு வருகிறார். இதற்கான விரிவான திட்டம், திர்வை எட்டும் ரோடுமேப் இல்லாமல் டாடா சன்ஸ் சேர்மன் பதவியே நீட்டிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார் நோயல் டாடா.

Also Read

இத்தகைய முக்கியமான கட்டத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் என்.சந்திரசேகரன் தொடர் நீட்டிக்க பதவி கால நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் தொடர வேண்டும் என்றால் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் டைரெக்டராக மீண்டும் நியமிக்கப்பட்டால் மட்டுமே இப்பதவியில் மறு நியமனம் செய்ய முடியும்.

என்.சந்திரசேகரன் டிசிஎஸ் சிஇஓ ஆக இருந்த அவர் முதன் முதலில் 2016 அக்டோபர் மாதம் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் சேர்ந்தார், இதை தொடர்ந்து 2017 ஜனவரி மாதம் டாடா சன்ஸ் சேர்மன் ஆக பதிவி உயர்வு பெற்றார். இதை தொடர்ந்து டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இவரது இடம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே சேர்மன் ஆக நியமிக்கப்படுவார்.

Recommended For You

பொதுவாக இக்கூட்டத்தில் மறுநியமனம் குறித்து எவ்விதமான எதிர்ப்புகளும் இருந்தது கிடையாது, ஆனால் நோயல் டாடா கேட்கும் கேள்விகள் மற்றும் என்.சந்திரசேகரன் எதிர்கொண்டு வரும் சவால்களை பார்க்கும் போது, ஆக்ஸட் 18ஆம் தேதி கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தற்போது டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்திற்கு முக்கிய தலைவலியாக இருப்பது ஏர் இந்தியா, பிக் பேஸ்க்ட் போன்ற நியூ ஏஐ வர்த்தகங்கள் எதிர்கொள்ளும் இழப்பு தான், இதை தாண்டி தான் பலோன்ஜி குழுமத்தின் பங்கு விற்பனை, ஐபிஓ போன்றவை வருகிறது. எனவே சந்திரசேகரனுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு என்பது பெரும் சவாலாக மாறக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+