இந்தியாவில் வசிக்கும் பல இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வேண்டும், வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான பொருளாதார வசதி இருக்காது. அப்படியும் சிலர் கஷ்டப்பட்டு படித்து வெளிநாடுகளுக்கு சென்று விடுவார்கள். இது போன்ற துடிப்பான இளைஞர்களை வரவேற்கும் பொருட்டு ஆஸ்திரேலியா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 2 ஆண்டுகள் வரை தங்கி வேலை செய்யும் திட்டத்தை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் MATES-Mobility Arrangement for Talented Early-professional Scheme என்று அழைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா கொண்டு வந்த திட்டத்தின் நோக்கம் என்ன?: பொதுவாக எந்த ஒரு நாட்டிற்கு சென்று தங்கி வேலை செய்ய வேண்டுமானாலும் அதற்கு விசா தேவைப்படும். விசா என்பது ஒரு நாட்டிற்குள் நுழைய பயன்படும் அதிகாரப்பூர்வ ஆவணம். இந்த விசா பயணத்தின் நோக்கம் மற்றும் நீங்கள் தங்கியிருப்பதற்கான கால அளவு போன்ற காரணிகளை பொறுத்து மாறுபடலாம். டிசம்பர் 2024-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் தொழில் தொடங்கியவர்களுக்கு ஆஸ்திரேலியா தற்காலிக விசாவை வழங்க முடிவு செய்துள்ளது.

தற்காலிக விசாவை பெறுவதற்கு நீங்கள் முன் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் இந்த விசாவை பெற்று விட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் 3000 டெம்ப்ரவரி விசா-க்களை வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதில் முதன்மையான விண்ணப்பதாரர்கள் சிலர் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரலாம். எனவே இந்த எண்ணிக்கை 3000 என்ற வரம்பிற்குள் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த துறைகளில் படிப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்?: ரினிவபுபல் எனர்ஜி, மைனிங், பொறியியல் படிப்புகள், தகவல் தொழில்நுட்ப படிப்புகள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், பைனான்சியல் டெக்னாலஜி, அக்ரிகல்சுரல் டெக்னாலஜி போன்ற துறையைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் 3000 மேட்ஸ் ஸ்ட்ரீம் விசாக்களை வழங்கவுள்ளது. மேல் காணும் துறைகளைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்குச்சீட்டு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். முதல் வாக்குப்பதிவு டிசம்பர் 2024 முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ஸ் ஸ்ட்ரீம் விசாவிற்கு விண்ணப்பிக்க நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பதிவு கட்டணமாக 25 AUD செலுத்த வேண்டும். அதாவது இந்திய மதிப்புக்கு தோராயமாக 1400 ரூபாய்.
முதலில் பதிவு செயல்முறையை முடித்து வாக்குச்சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மட்டுமே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். பதிவு செய்வதற்கு இந்தியர் சரியான பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தால் செல்லுபடியாகும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications