ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அவசர பயணத்திற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸியை பயன்படுத்தி வரும் நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக உயராத நிலையில் திடீரென ஆட்டோ, டாக்ஸி கட்டணம் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ, டாக்ஸி கட்டணம்
டெல்லி போன்ற பெருநகரங்களில் பேருந்து மற்றும் ரயில் பயணம் செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பெரிதும் நம்பியிருப்பது ஆட்டோ மற்றும் டாக்ஸி மட்டுமே. ஆட்டோ மற்றும் டாக்ஸியில் இதுவரை நியாயமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர மக்களுக்கு பேரிடியாக உள்ளது.
டெல்லி அரசு
டெல்லி அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் கிலோமீட்டருக்கு 5 ரூபாய் உயர்வு மற்றும் ஏசி மற்றும் ஏசி அல்லாத டாக்ஸி கட்டணம் ரூபாய் 4 மற்றும் ரூபாய் 3 என உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பணக்காரர்களை பெரிய அளவில் பாதிக்காது என்றாலும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம்
இந்த கட்டண உயர்வுக்கு பின் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயரவுள்ளது. அதன்பின் மீட்டருக்கு ஒரு கிலோமீட்டர் கட்டணம் ரூ.9.50ல் இருந்து ரூ.11 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டாக்ஸி கட்டணம்
டாக்ஸிகளை பொருத்தவரை ஏசி அல்லாத வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.14ல் இருந்து ரூ.17 ஆகவும், ஏசி வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.16ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
2 வருடங்களுக்கு பின் உயர்வு
கடந்த 2020ஆம் ஆண்டு ஆட்டோவுக்கான அடிப்படை கட்டணம் திருத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வருடங்களுக்கு பின் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கருப்பு மற்றும் மஞ்சள் டாக்சி, எகானமி டாக்ஸி மற்றும் பிரீமியம் டாக்சி ஆகியவற்றுக்கான கட்டணம் 9 ஆண்டுகளுக்கு பின் திருத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications