இந்தியா ஆட்டோமொபைல் துறை பல போராட்டங்களுக்குப் பின்பு நிலையான வர்த்தகத்தைப் பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் மாநில அரசுகள் அறிவிக்கப்பட்டு வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆட்டோமொபைல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்தது. குறிப்பாகச் சுமார் 5 மாதம் எவ்விதமான வர்த்தகமும் இல்லாமல் ஆட்டோமொபைல் துறை முடங்கியது, இதில் உற்பத்தித் துறையும் அடக்கம்.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு வர்த்தகச் சந்தை வளர்ச்சிப் பாதைக்கு அடியெடுத்து வைத்த போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
ஆனால் கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் கார் மற்றும் பைக் விற்பனை மந்தமானது மட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி செலவுகள் பெரிய அளவில் அதிகரித்தது. இதன் காரணமாக நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் கார் விலையை உயர்த்த முடிவு செய்தது.
144 தடை உத்தரவு
தற்போது நாடு முழுவதும் 2வது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமான காரணத்தால் அடுத்த 15 நாட்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு 144 தடை உத்தரவுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
20 சதவீத வர்த்தகம்
ஏற்கனவே இந்தியா முழுவதும் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சுமார் 20 சதவீத வர்த்தகம் பாதிக்கும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளது.
ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை
கடந்த 2 வாரத்தில் புதிய கார் வாங்க வருவோர் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 20 சதவீதம் சரிந்துள்ளது எனப் பல ஆட்டோமொபைல் டீலர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் இதுவரை ஒரு கார் கூட விற்பனை செய்யாமலும் உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications