ஒருகாலத்தில் மிகக் குறைந்த விலையுள்ள கார்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது ரூ.5 லட்சத்துக்குக் குறைவான விலையுள்ள கார்களுக்கான கிராக்கி மிகவும் குறைந்து விட்டது. இதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாகவே கூடுதல் அம்சங்கள், பாதுகாப்பு அமைப்புகள் நிறைந்த பெரிய கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பத் தொடங்கியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சத்துக்கு குறைந்த விலையுள்ள கார்கள் சந்தையில் 33.6 பங்கை வகித்தன. ஆனால் 2023 ஆம் ஆண்டில் இது 0.03 சதவீதம் குறைந்து விட்டது. சாமானிய மக்களுக்குக் கட்டுபடியான விலையுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி கூட விற்பனை குறைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்துக்கு குறைவான விலையுள்ள கார்களின் விலை அளவுகள் அதிகரித்து விட்டது. எஸ்யூவி, சொகுசு கார்கள், செடான்களின் விலை இத்துடன் ஒப்பிட்டால் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதி சுசூகியின் ஆல்ட்டோ, எஸ்-பிரஸ்ஸோ மாடல்களின் விற்பனை சரிந்து விட்டது.
அதேவேளையில் ரூ.7 முதல் ரூ.8 லட்சம் வரையிலான பலீனோ, பெரஸ்ஸோ, கிராண்டு விட்டாரா, மாருதி சுசூகி விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
மாருதி சுசூகியின் மூத்த செயல் அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், சிக்கனமான கார்களுக்கான தேவை குறைவதற்கு கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து வருமானம் குறைவதால் மட்டும் ஏற்படவில்லை.
மாறாக, வாடிக்கையாளர்கள் இப்போது மேம்படுத்தப்பட்ட இணைப்பு அம்சங்கள், சிறந்த குடும்ப பாதுகாப்பு மதிப்பீடுகள், பொழுதுபோக்கு விருப்பங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகள் கொண்ட கார்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரைகள், 360 டிகிரி கேமராக்கள் மற்றும் சன்ரூஃப்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள விருப்பத்தை இந்தப் போக்கு சுட்டிக்காட்டுகிறது.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், நுகர்வோர் மிகவும் விரிவான மற்றும் நவீன ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் கார்களில் செலவிட தயாராக உள்ளனர் என்று கூறினார்.
இந்த நிலையில் இப்போது ரெனால்ட் டஸ்ட்டர், கியா போன்ற நிறுவனங்கள் ரூ.8 லட்சத்துக்குள் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. இந்தக் கார்களின் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இவற்றில் பல புதிய சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் இப்போது அரசு மானியத்துடன் விற்பனையாகும் மின்சார வாகனங்களுக்கும் நிறைய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications