ஆயிரக்கணக்கானோர் வீட்டுக்கு அனுப்பப்படலாம்.. போஷ் இந்தியா அதிரடி.. கதி கலங்கும் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் பிரச்சனை காரணமாக ஏற்கனவே பல ஆயிரம் பேர் இத்துறையில், தங்களது பணியினை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் அல்லாது, வாகன உதிரி பாகங்கள் நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு அட்டோமொபைல் துறை தான் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது எனில், நடப்பு ஆண்டிலும் இந்த வீழ்ச்சி தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போஷ் நிறுவனம் இந்தியாவிலும் தனது கிளையை நிறுவியுள்ளது.

போஷ் எடுத்த அதிரடி முடிவு

போஷ் எடுத்த அதிரடி முடிவு

உலகின் மிகப்பெரிய வாகன உதிரி பாகங்கள் சப்ளையரான போஷ் லிமிடெட், அதன் பெற்றோர் நிறுவனமான ஜிஎம்பிஹெச் உடன் இணைந்து பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தெற்காசிய நாடான இது பல தசாப்தங்களாக அதன் மோசமான நிலையை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் வாகன விற்பனை மேலும் மோசமடைந்துள்ளன.

எத்தனை பேர் பணி நீக்கம்?

எத்தனை பேர் பணி நீக்கம்?

ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிளையின் நிர்வாக இயக்குனர் சவுமித்ரா பட்டாச்சார்யா கூறுகையில், 3,700 வெயிட் காலர் பணியில் 10 சதவிகிதம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 6,300 ப்ளு காலர் பணியில் அதிகளவிலான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் பெங்களுருவில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் பணி நீக்கம்

இந்த ஆண்டில் பணி நீக்கம்

உலகெங்கிலும் உள்ள கார் தயாரிப்பாளர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் 80,000 வேலைகளை குறைத்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டது. இது இத்துறையில் நிலவி மந்த நிலையின் எதிரொலி, தேவை குறைவால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் நிறுவனம் பாதிக்கப்படும் என்றும், இதனால் உதிரி பாகங்கள் துறையிலும் பணி நீக்கம் தொடரலாம் என்றும் கருதப்படுகிறது.

அடுத்த சில ஆண்டுகளில் சீரடையலாம்

அடுத்த சில ஆண்டுகளில் சீரடையலாம்

இந்த நிலையில் போஷ் நிறுவனம் அடுத்து வரும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் வாகன விற்பனை சீரடையும் என்றும், இதனால் அந்த சமயத்தில் விற்பனை சீரடையும் என்றும் போஷ் நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பங்கு விலை

பங்கு விலை

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் போஷ் நிறுவனம் அதன் நிகரலாபத்தில் 66 சதவிகித வீழ்ச்சியை கண்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அதன் பங்கு விலை 22 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை 121 ரூபாய் ஏற்றம் கண்டு, 15,399 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Automobile sector crisis: Bosch India may lay off thousands of jobs as sales slump in auto sector

Bosch India may lay off thousands of jobs as sales slump in auto sector. German company will cut a couple of thousand jobs in India in the next four years.
Story first published: Thursday, January 2, 2020, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X