அயோத்தி: ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ள அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த பகுதி ஆன்மீக சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அயோத்தி மாவட்ட நிர்வாகம் நிலங்களுக்கான அரசின் மதிப்பீட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ராமர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நிலங்களின் சர்க்கிள் விகிதத்தை 200% வரை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
சர்க்கிள் விகிதங்கள் என்பது கலெக்டர் விகிதங்கள் என்றும் அறியப்படுகின்றது. அதாவது மாநில அரசாங்கம் சொத்து மதிப்புகளை தீர்மானம் செய்வதற்கான ஒரு அளவுகோலாக இந்த சர்க்கிள் விகிதங்களை பயன்படுத்திருக்கின்றன. இதனை நிலத்தின் மீதான அரசின் மதிப்பீடு என்றும் கூறலாம்.

இந்த விகிதங்களின் அடிப்படையில் தான் சொத்து பரிவர்த்தனைகளுக்கான முத்திரை வரி கணக்கிடப்படுகிறது. விற்பனை பத்திரத்தில் ஒரு சொத்தின் அறிவிக்கப்பட்ட மதிப்பு குறைவாக இருந்தாலும் பதிவாளர்கள் சர்க்கிள் விகிதங்களின் அடிப்படையில் மட்டுமே கட்டணத்தை கணக்கிட வேண்டும்.
அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதனை அடுத்து கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே தான் அயோத்தி சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கான சர்க்கிள் விகிதங்களை உயர்த்த மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அயோதியில் தற்போது இருக்கும் சந்தை விலையையும் அரசு வரி வசூலிக்கும் விலையையும் ஒப்பிடும்போது மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உதாரணமாக ராமர் கோயிலுக்கு அருகில் இருக்கும் இடங்கள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் இருக்கும் நிலங்கள் சர்க்கிள் விகிதங்களை விட 1,235% அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்த பகுதிகளில் இருக்கும் நிலங்களின் சர்க்கிள் விகிதத்தை 200% உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவு முன் வடிவு தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் பொது மக்களின் கருத்து கேட்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான தங்களுடைய ஆட்சேபனைகளை பொதுமக்கள் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு அதன் அடிப்படையில் புதிய மதிப்பீடு விகிதங்கள் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ராமர் கோயில் கட்டுமான பணிக்கு முன்னரே மதிப்பீடுகளை உயர்த்த திட்டமிடப்பட்டு அது கைவிடப்பட்டது. தற்போது 7 ஆண்டுகளுக்கு பின்னர் நிலத்தின் மதிப்பீடுகள் உயர்த்தப்பட உள்ளன.
இதனிடையே அயோத்தியாவில் நிலத்தின் மதிப்பீடுகளை உயர்த்துவதற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கியவர்கள் எல்லாம் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் காணப் போகிறார்கள். எனவே பாஜகவினருக்கு சாதகமாகவே இப்படி ஒரு முடிவு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications